|
|||||
கொரோனாவிற்குச் சரியான தடுப்பு மருந்து கபசுரக்குடிநீரே. |
|||||
கொரோனாவிற்குச் சரியான தடுப்பு மருந்து கபசுரக்குடிநீரே.
என்றாலும் அதைக் குடிப்பதில், குடிக்கும் முறையில் மக்களிடையே சிரமம் உள்ளது என்பதை அறிகிறேன். இன்னும் சரியான முறை எது என்று அறிந்திராத சூழலால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபடாத நிலை நிலவுகிறது.
பெரும்பாலும், கபசூரக்குடிநீர்ச் சூரணத்தில் சேர்க்கப்பட வேண்டிய மூலிகைச் சேர்மானங்கள் எவையெவை சேர்க்கப்படவேண்டுமோ அவையவை அவற்றிற்கான அளவில் சேர்க்கப்படாத நிலையில் முழுமையான பலனைத் தராமல் போகலாம். ‘இம்ப்காப்ஸ்’, தயாரித்து வழங்கும் கபசுரக்குடிநீர்ச்சூரணத்தை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்தமருந்துக்கடைகளிலிருந்து, மருத்துவர்களிடமிருந்து மக்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்வது நன்று.
பாதிக்கப்பட்டவருக்கு:
35 கிராம் கபசுரக்குடிநீரை, ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, கால் லிட்டராகச் சுருக்கி ஃப்ளாஸ்க்கில் சூடாக வைத்து 50 - 60 மிலி வீதம் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து முறை குடிக்கவேண்டும். அன்றே குடித்து முடித்து விட வேண்டும். இது முழுவதும் ஒரு நபருக்கானது. இப்படியாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் குடிக்கவேண்டும்.
ஆங்கில மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களும் இந்தக் கபசுரக்குடிநீரை எடுத்துக்கொள்ளலாம்.
நோய்தொடக்க நிலை தாண்டிய தீவிர நிலையில், கபசுரக்குடிநீருடன் கற்ப அவிழ்தப்பொடியும் வஜ்ஜிரகண்டி மாத்திரையும் சேர்த்துக்கொடுக்கிறோம்.
கபசுரக்குடிநீருடன் ஆடாதோடை மணப்பாகு (5மிலி முதல் 10 மிலி) அல்லது ஆடாதோடை இலைப்பொடி சேர்த்துக்குடிக்க நுரையீரல் பாதிக்கப்படாமல், மூச்சுத்திணறல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது, நோயாளியிடமிருந்து அச்சத்தை அகற்றிவிடுகிறது.
எளிதில் செரிமானம் ஆகும், இட்லி, அன்னப்பால் கஞ்சி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு கைப்பிடி அரிசியுடன் இரண்டு மிளகு, இரண்டு ஏலக்காய், அரைத்தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை வறுத்து ஒன்றிரண்டாக அரைத்து அதனுடன் நிறைய தன்ணீர் சேர்த்து கஞ்சியாகக் காய்ச்சி கஞ்சியை மட்டும் குடிப்பது நோயுற்ற நாட்களல் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கும் என்கிறார் மரு. மைக்கேல் ஜெயராஜ்.
நோயால் பாதிக்கப்பட்ட நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிக்காமல், குளிர்ந்த பழச்சாறு அருந்தாமல் உடலை வெப்ப நிலையிலேயே வைத்துக்கொள்வது நோயிலிருந்து விரைவில் விடுதலை அடைய உதவும்.
நோய்வராமல் தடுத்துக்கொள்ள விரும்புவோருக்கும் எதிர்ப்பிற்காகக் குடிக்க விரவிரும்புவோருக்கும்:
வாரத்திற்கு இரு முறை மேற்சொன்னவாறாகச் சில நாட்கள் இடைவெளியில் கபசுரக்முடிநீரைக் குடிக்கவேண்டும்.
வெளியில் எங்கும் நேரடியாக வழங்கப்படும் கபசுரக்குடிநீரை வாங்கிக் குடிக்காதிருப்பது நன்று. அது, கபசுரக்குடிநீரைக் குடித்துவிட்டதான ஓர் உணர்வைத் தந்தாலும் எப்படி, எப்பொழுது தயாரிக்கப்பட்டது என்பது அறியாமல் குடிப்பது சரியன்று.
எல்லா அரசு மருந்தகங்களிலும் சிறிய சிறிய பொட்டலங்களாக கபசுரக்குடிநீர்ச்சூரணம் அதாவது, 5 கிராம் பொட்டலமாகக் கிடைக்கச்செய்வது இன்றைய நிலையில் சிறந்த திட்டம் என்று பரிந்துரைக்கிறார் மருத்துவர் மைக்கேல்.
நோய் தொடக்க நிலையில், மேற்சொன்ன முறையில் தானே தயாரித்துக் குடிக்கும் கபசுரக்குடிநீர் சிறந்த பலனைத் தருகிறது. நோயின் தீவிர நிலையை அடையாமல் நோயாளியைப் பாதுகாக்கிறது.
நோய் பாதிக்கப்பட்டவருக்கும் கபசுரக்குடிநீருடன், மேற்சொன்ன அவிழ்தப்பொடி, பிரமானந்த பைரவ மாத்திரை, வஜ்ஜிரகண்டி மாத்திரை சிறப்பான பலனைத் தந்திருக்கின்றன.
(இன்று 70 வயது முதியவர் ஒருவருக்கு சிகிச்சைக்குப் பின் அவருடைய நுரையீரல் முழுமையாக குணமடைந்திருந்ததைப் பார்த்தோம். காரணம், நோயின் தொடக்க நிலையிலும் தீவிர நிலையிலும் முழுமையாக, முறையாகச் சித்தமருந்துகளை எடுத்துக்கொண்டார். )
நியாய விலைக்கடைகளிலும் கபசுரக்குடிநீர் வழங்கப்படவேண்டும்.
தமிழ்நாட்டில், கபசுரக்குடிநீர் குடிப்பது பண்பாடாக வேண்டும்.
ஒவ்வொருவரும் கபசுரக்குடிநீரைக் குடிக்கும் முறையை அறிந்து, அதைப் பின்பற்றினால் பெருவாரியாக நாம் நோயிலிருந்து விடுபடலாம்.
|
|||||
by Swathi on 12 May 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|