LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

நினைவேந்தல் - அருமை அப்பாவிற்கு.....

ஆண்டொன்று கழிந்தது.

மீண்டென்று வருவாரோ?

உணர்வுந்தும் மனம்தனிலே

வெற்றிடம் கலையாதோ?

மாண்டவர்தம் மரிப்பதில்லை

மக்கள் மனதில் வாழ்வதனால்,

கனவாகி போகுமென்று

நித்தம் நித்தம் நினைத்ததுண்டு.

 

மெய்கொண்ட வாழ்வுமட்டும்

மெய்யென்று நினைப்பதனால்,

உய்வெய்தும்  வாழ்வொன்று

வானுலகில்  உணர்ந்தோமிலை!

செய்திட்ட  அருஞ்செயலை

அன்றாடம் அசைபோட்டே

பொய்யுலகை பெரும்பேறாய்

போற்றிப் பேணுகிறோம்.

 

சென்றோர்கள் வந்ததில்லை

வந்தோர்களும் நிலைப்பதில்லை

இறப்பெனும் நிலையொன்றே

நீங்காது நிலைத்ததொன்றே.

என்றெல்லாம் உரை பகன்றே

உணர்வொன்றும் மறைந்திடாதே.

சிறப்பாக வாழ்ந்தாரை

சிந்தையேந்தி வணங்கிடுவோம்.

 

வாழ்த்துக்கள் வேண்டி வணங்கியேத்தும்

                                          அன்புமைந்தன் து.கிருஷ்ணமூர்த்தி

NINAIVENTHAL - ANBU APPAVIRKU......
by D.Krishnamurthy   on 06 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.