LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மீண்டும் தொடங்கியது அகழாய்வுப் பணிகள், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் தமிழக தொல்லியல் துறையின் அகய்ழாய்வுப் பணி தொடங்கியது.

மீண்டும் தொடங்கியது அகழாய்வுப் பணிகள்,ஆதிச்சநல்லூர் ,சிவகளை, கொற்கையில், தமிழகத் தொல்லியல் துறையின் அகழாய்வுப் பணி தொடங்கியது.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஆதிச்சநல்லூர் சிவகளை,கொற்கை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன.
தமிழக அரசின் தொல்லியல் துறையினால் இவ்விடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்ததையடுத்து மே 10ஆம் தேதி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அரசு தற்போது தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் இன்று (10.6.2021) பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர் ,சிவகளை ,கொற்கை ஆகிய தொல்லியல் களங்கள்

ஆதிச்சநல்லூர் (ஆதி தச்ச நல்லூர்)

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த நாகரீகத்தை சொல்லும் களமாக உள்ளது. 1876, 1902, 1905 ,2004 ,2005 ஆண்டுகளிலும் இங்கு அகழாய்வு நடந்துள்ளது.இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தொடர்பாக இங்கு ஐந்து கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது தமிழக அரசு தொல்லியல்துறை (2020 முதல்)ஆறாம் கட்ட அகழாய்வு பணியை துவங்கியுள்ளது.
இங்கு ஆய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரெயா என்பவர் தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகப்பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.இங்கு மூவர் 3,800 ஆண்டுகளுக்கு பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இரும்புக் கருவிகள் பொன், வெண்கலம் அறிய கற்களாலான மணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிவகளை

சிவகளை தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள சிவகளை ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.இது 2000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தொல்லியல் களமாக உள்ளது .இப்பகுதியைச் சேர்ந்த பள்ளியில் பணியாற்றும் வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு மே 25 ,2020 முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையினால் அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. இப்போது இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொற்கை

இங்கு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறையினால் முதற்கட்ட ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. இங்கு நடைபெற்ற ஆய்வுகள் தமிழ் எழுத்து வளர்ச்சிக்கு திருப்புமுனையைத் தந்துள்ளன என்று கூறலாம்.

by R.Gnanajothi   on 13 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.