|
|||||
மீண்டும் தொடங்கியது அகழாய்வுப் பணிகள், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் தமிழக தொல்லியல் துறையின் அகய்ழாய்வுப் பணி தொடங்கியது. |
|||||
மீண்டும் தொடங்கியது அகழாய்வுப் பணிகள்,ஆதிச்சநல்லூர் ,சிவகளை, கொற்கையில், தமிழகத் தொல்லியல் துறையின் அகழாய்வுப் பணி தொடங்கியது. ஆதிச்சநல்லூர் ,சிவகளை ,கொற்கை ஆகிய தொல்லியல் களங்கள் ஆதிச்சநல்லூர் (ஆதி தச்ச நல்லூர்) தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த நாகரீகத்தை சொல்லும் களமாக உள்ளது. 1876, 1902, 1905 ,2004 ,2005 ஆண்டுகளிலும் இங்கு அகழாய்வு நடந்துள்ளது.இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தொடர்பாக இங்கு ஐந்து கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது தமிழக அரசு தொல்லியல்துறை (2020 முதல்)ஆறாம் கட்ட அகழாய்வு பணியை துவங்கியுள்ளது. சிவகளை சிவகளை தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள சிவகளை ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.இது 2000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தொல்லியல் களமாக உள்ளது .இப்பகுதியைச் சேர்ந்த பள்ளியில் பணியாற்றும் வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு மே 25 ,2020 முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையினால் அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. இப்போது இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொற்கை இங்கு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறையினால் முதற்கட்ட ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானையோடுகள் கிடைத்துள்ளன. இங்கு நடைபெற்ற ஆய்வுகள் தமிழ் எழுத்து வளர்ச்சிக்கு திருப்புமுனையைத் தந்துள்ளன என்று கூறலாம். |
|||||
by R.Gnanajothi on 13 Jun 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|