மீனவர்களுக்கு நீலம் திட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
விவசாயிகள் நலனுக்காக பசுமை திட்டம் செயல்படுத்தப்பட்டது போல மீனவர்கள் நலனுக்காக நீலம் என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார் அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூரின் அருகே உள்ள அமலிநகர் கிராமத்தில் மீனவர்களுக்கு படகுக்கு பொருத்தும் இந்திரம் மானிய விலையில் வழங்கி இதனைக் கூறினார்.
மீன்வளத்துறை முதல்வர் ஸ்டாலின் அவர்களால், மீனவர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு தற்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று மாற்றம் பெற்றிருப்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், ✓நெல்லுக்கு ஆதார விலை இருப்பது போன்று மீனவர் பிடித்துவரும் மீன்களுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்தல் ✓மீனவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மானிய விலையில் படகுகள் வழங்குவதை மாற்றி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்குவது ஆகியவைக் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், அனைத்து மீனவ கிராமங்களிலும் தரம் உயர்த்தப்பட்ட மீன் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும் என்றும், அந்தந்த கிராமங்களிலேயே படகுகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன்.
|