LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஆயிரம் ஆண்டு பழைமை சொல்லும் சேரன்மகாதேவி சோழர் கால கல்வெட்டு

 ஆயிரம் ஆண்டு பழைமை சொல்லும் சேரன்மகாதேவி சோழர் கால கல்வெட்டு
திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவியில் உள்ள இராமசாமி கோயிலில் 1006 ஆண்டு பழமையான சோழர்கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள வரலாற்று பண்பாட்டு மைய நிர்வாகிகள்,  இயக்குனர் மாரியப்பன் மற்றும் தமிழ்ப் பேரவைச் செயலாளர் பாலு,மதுரை மாவட்ட முன்னாள் தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கம் ஆகியோர் சென்று பார்வையிட்டு அது பற்றிய தகவலை தெரிவித்துள்ளனர்.

பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணன் என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் சோழர் காலத்தில் வெட்டுவிக்கப்பட்டுள்ளன.இராசராச சோழனின் மகன் இராஜேந்திர சோழனின் மூன்றாவது ஆட்சி காலத்தில் 1015-ஆம் ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு 1006 ஆண்டு பழமையானது. கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் முள்ளிநாட்டு பிரம்மதேயமான சோழநிகரிலி சதுர்வேதிமங்கலம், இக்கோயிலின் கடவுள் நிகரிலி சோழ விண்ணகர உடையார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கோயிலுக்கு நந்தாவிளக்கு தானமாக வழங்கப்பட்டதையும் நெய்யும் வழங்கப்பட்டதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது. அளவுக்கு அதிகமாக நெய்யினை ஊற்றாமல் விளக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இக்கல்வெட்டு தெரிவிக்கும் செய்தியாகும்,என்று மாரியப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

by R.Gnanajothi   on 06 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.