ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்கும்...ரூபாய் 1.25 கோடி நிதி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைக்கு உண்டான நிதிப் பற்றாக்குறையால் அங்கு செயல்படும் தமிழ்ப்பிரிவு மூடப்படும் என்று கொலோன் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இது பற்றிய செய்தி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பினை வழங்கும் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடர்ந்து நன் முறையில் இயங்க 1.25 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
முந்தைய அரசு தமிழ்ப் பிரிவிற்கு ஒரு கோடியே 25 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும்,அத்தொகை அப்போது வழங்கப்படவில்லை. உடனடியாக நிதி வழங்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அப்போதே வலியுறுத்தினார்.தற்போது இந்நிதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து இயங்க உடனடியாக வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மு.க. ஸ்டாலின் அவர்கள் கருணாநிதி வழியில் செயல்படும் இவ்வரசு இது போன்ற திட்டங்களுக்கு உதவும் என்றும், கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை இன்னும் 2 ஆண்டுகளில் 60 ஆண்டுகள் நிறைவு காணும் நல்வாய்ப்பிற்கு உதவுவதோடு தமிழ் மொழி,இனம்,பண்பாடு நாகரிகம் போன்றவை உலக அளவில் பரவ என்றும் துணை நிற்கும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
|