அகரம் அகழாய்வு, தமிழர் நாகரிகச் செழுமை சொல்லும் பெண் முக சுடுமண் பொம்மை
சிவகங்கை மாவட்டம் அகரம் பகுதியில் பெண் முக வடிவம் கொண்ட சுடுமண் பொம்மை கண்டறியப்பட்டுள்ளது.அகரம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெண் முக வடிவ சுடுமண் பொம்மை 2000 ஆண்டுகளுக்கு முன்பானது என்று தெரியவந்துள்ளது.
சங்ககால மகளிர் உருவத்தினை நினைவுபடுத்துகின்றது இந்த தலைப்பகுதி சிற்பம்.சரிந்த கொண்டையோடு நெற்றியில் நெற்றிச்சூடி, வளைவான புருவங்கள், காதில் பூத்தோடு, கூர்மையான மூக்கு, குவிந்த உதடுகள் வனப்பு மிக்கதாக உள்ள பெண் முகத்தைக் கூறுகிறது அந்தக் கலைப்பொருள்.
இளஞ்செழியன் என்பவர் இந்த சுடுமண் பொம்மையின் முகத்தினை வரைந்தளித்துள்ளார்.சிந்துவெளிக்கு நிகரான அதற்கு முன்பாகவும் நீளும் தமிழ் நாகரீகத்தையும் சிறப்பினையும் வெளிக்கொணர்கிறது இந்த விலை மதிப்பற்ற கலைப்பொருள்.
|