இலங்கை தமிழர் இந்தியக் குடியுரிமை பெற தொடர்ந்து வலியுறுத்துவோம், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி
விருதுநகர்,தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி,தேனி மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழ் அகதி முகாம்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்துப் பேசினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளதாக கூறினார். மேலும் இலங்கை தமிழர்களில் பெரும்பாலானோர் இந்தியக் குடியுரிமை பெற வேண்டுமென்று கூறுவதை குறிப்பிட்ட அவர் தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும்,சிலர் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து இருப்பதையும் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
|