சித்த மருத்துவத்திற்கென தனிப் பல்கலைக்கழகம், முதற்கட்டமாக ஒதுக்கப்படுகிறது ரூபாய் 2 கோடி
திமுக அரசின் முதல் நிதியறிக்கையினை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் (ஆகஸ்ட் ,13) தாக்கல் செய்தார். அப்போது அவர் மக்களைத் தேடி மருத்துவம், ஆம்புலன்ஸ் சேவை திட்டம்,கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி குறிப்பிட்டார்.
பின்னர் பிற உள்நாட்டு மருத்துவமுறைகளை போல் சித்த மருத்துவத்திற்கும் உரிய அங்கீகாரத்தை அளிக்கும் வகையில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தினை அரசு அமைக்கும் என்றும் இதற்கான முதல் கட்ட நிதி உதவியாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
கருணாநிதி அவர்கள் சித்தா பல்கலைக்கழகத்தினை அமைத்திட திட்டமிட்டு அதற்கான உரிய நிலத்தை தெரிவு செய்ததையும் குறிப்பிட்ட அமைச்சர், ஆனால் அப்போது அது செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார்.
தமிழரின் தனித்துவ மருத்துவ முறையான சித்த மருத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அது பற்றிய அறிவினை இளைஞர் மற்றும் தமிழ் மக்கள் பெற உரிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
|