தமிழ் வளர்ச்சித் துறை தொல்லியல் துறைக்கென நிதி ஒதுக்கீடு
திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் (ஆகஸ்ட், 13) தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தொல்லியல் துறைக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி கீழடி, சிவகளை, ஆதிச்ச நல்லூர் தொல்லியல் அகழாய்வுகள் அறிவியல் முறையில் மேற்கொள்ளப்பட ரூபாய் 5 கோடி ஒதுக்கப்பட உள்ளது.
அகழாய்வின் போது கண்டறியப்பட்ட தொல்லியல் பொருட்கள் தொல்லியல் தளங்கள் அமைத்து பாதுகாக்கப்படுமென்றும்,கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது, என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார்.
தமிழ் வளர்ச்சித்துறைக்கென ரூ 80.26 கோடியும், தொல்லியல் துறைக்கென ரூபாய் ரூ 29.43 கோடி ஒதுக்கப்பட உள்ளது என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|