LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சுஹாஞ்சனா தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகர், வாழ்த்துகள் பெறும் தமிழக அரசு

 சுஹாஞ்சனா தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகர் ,வாழ்த்துகள் பெறும் தமிழக அரசு

தி.மு.க அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் அதிரடியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசின் அன்னைத்தமிழிழ் அர்ச்சனைத் திட்டம் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அதுபோல தற்போது சுஹாஞ்சனா என்ற பெண்ணிற்கு அர்ச்சகர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சுஹாஞ்சனா, கோவில் சன்னிதி முன் சைவத்திருமுறைகள் பாடும் காட்சிப் பதிவுகள் விரைவாக பகிரப்பட்டு வருகின்றன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில் 5 தலித் இனத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.தமிழ் நாட்டிலேயே முதல்முறையாக சுஹாஞ்சனா பெண் ஓதுவாராக செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குப் பணி நியமன ஆணை பெற்றுள்ளார்.

27 வயது உடைய சுகாஞ்சனா கரூரைச் சேர்ந்தவர். தேவாரம், திருவாசகம் இரண்டையும் நன்கு கற்றறிந்தவர். பணி ஆணை பெற்றுக்கொண்ட சுஹாஞ்சனா ஓதுவார் பணி நியமன ஆணை கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இறைவன் முன்பு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.மேலும் பெண்கள் விருப்பப்பட்டு ஓதுவார் பயிற்சி பெற வேண்டும் என்று கூறியுள்ளார் பக்தி நெறியைப் பரப்பும் வாய்ப்பு அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சுஹாஞ்சனா.

தமிழக அரசு

*அன்னை தமிழில் அர்ச்சனை

*அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

*கடவுள் முன் ஆண் பெண் பாகுபாடு ஒழிந்து ,பெண் அர்ச்சகர்கள்

என்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

அடையாளத்தைக் காக்க வேண்டும் என்பதும்,எது ஒன்றையும் தன் அடையாளத்தோடு கூட வெளிக்கொணர்வதும் சிறப்பு மிக்க ஒன்றாக பாராட்டப்பட வேண்டியதே.

by R.Gnanajothi   on 19 Aug 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.