|
|||||
சுஹாஞ்சனா தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகர், வாழ்த்துகள் பெறும் தமிழக அரசு |
|||||
சுஹாஞ்சனா தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகர் ,வாழ்த்துகள் பெறும் தமிழக அரசு தி.மு.க அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் அதிரடியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசின் அன்னைத்தமிழிழ் அர்ச்சனைத் திட்டம் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அதுபோல தற்போது சுஹாஞ்சனா என்ற பெண்ணிற்கு அர்ச்சகர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. சுஹாஞ்சனா, கோவில் சன்னிதி முன் சைவத்திருமுறைகள் பாடும் காட்சிப் பதிவுகள் விரைவாக பகிரப்பட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில் 5 தலித் இனத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.தமிழ் நாட்டிலேயே முதல்முறையாக சுஹாஞ்சனா பெண் ஓதுவாராக செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குப் பணி நியமன ஆணை பெற்றுள்ளார். 27 வயது உடைய சுகாஞ்சனா கரூரைச் சேர்ந்தவர். தேவாரம், திருவாசகம் இரண்டையும் நன்கு கற்றறிந்தவர். பணி ஆணை பெற்றுக்கொண்ட சுஹாஞ்சனா ஓதுவார் பணி நியமன ஆணை கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இறைவன் முன்பு பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.மேலும் பெண்கள் விருப்பப்பட்டு ஓதுவார் பயிற்சி பெற வேண்டும் என்று கூறியுள்ளார் பக்தி நெறியைப் பரப்பும் வாய்ப்பு அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சுஹாஞ்சனா. தமிழக அரசு *அன்னை தமிழில் அர்ச்சனை *அனைத்து சாதியினரும் அர்ச்சகர் *கடவுள் முன் ஆண் பெண் பாகுபாடு ஒழிந்து ,பெண் அர்ச்சகர்கள் என்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அடையாளத்தைக் காக்க வேண்டும் என்பதும்,எது ஒன்றையும் தன் அடையாளத்தோடு கூட வெளிக்கொணர்வதும் சிறப்பு மிக்க ஒன்றாக பாராட்டப்பட வேண்டியதே. |
|||||
by R.Gnanajothi on 19 Aug 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|