அகரம் அகழாய்வில் தங்கக்காதணி கண்டெடுப்பு
தமிழக தொல்லியல் துறையினரால் அகழாய்வுப் பணிகள் தொய்வின்றி முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.நாகரீகச் சிறப்பினை உணர்த்தும் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டபடி உள்ளன.சிவகங்கை கீழடி பகுதியின் அருகான அகரம் அகழாய்வில் தங்கக் காதணி கண்டறியப்பட்டுள்ளது.
அறுங்கோண வடிவில் துளை கொண்டதாக உள்ளது அக்காதணி.அது ஒரு பெண்ணுடையது என அறிய முடிகிறது.செப்டம்பர் மாதத்துடன் அகழாய்வுப் பணிகள் இங்கு நிறைவு பெற உள்ளதால் முழுமூச்சோடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
|