பெரியாரின் பிறந்தநாள் இனி சமூகநீதி நாள்
பெரியாரின் பிறந்த நாள் இனி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.இதுபற்றி பேசிய ஸ்டாலின் அவர்கள் எதற்கும் அஞ்சாது சமூக நீதிக்காக கடைசி நொடி வரை போராடியவர் பெரியார் என்று குறிப்பிட்டுள்ளார். மக்களிடையே தற்போது உள்ள சமத்துவத்திற்கும், எழுச்சிக்கும் பெரியாரே காரணம் என்றும் குறிப்பிட்ட அவர் செப்டம்பர் 17, சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
|