திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு
நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமை பெற்றுள்ளார் திருநங்கை சௌமியா சாசு.கல்வியில் ஆர்வம் கொண்ட சௌமியாஅறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பின்னர் திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று உள்ளார். ஊட்டியின் வழக்கறிஞரிடம் Junior-ஆக இருந்து தற்போது ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பணியேற்று உள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த திருநங்கை சௌமியா கனவோடு உழைத்து உதாரணமாக உயர்ந்திருக்கிறார். சாதிப்பதற்கு தன் பாலினம் தடையில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார் சௌமியா.
|