"உலகின் தொன்மையான நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்றுள்ளது மகிழ்ச்சி" ஆளுநர் இரவீந்திர நாராயண ரவி.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளார் இரவீந்திர நாராயண ரவி அவர்கள். ஆளுநர் ரவி பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய பொழுது உலகின் தொன்மையான நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தின் ஆளுநராக பதவியேற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
பழம்பெரும் கலாச்சாரத்தைக் கொண்டது தமிழ்நாடு என்று குறிப்பிட்ட அவர் தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது. தமிழகத்திற்கு சேவையாற்றுவது தான் முதல் பணி. தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவேன் என்றும் கூறினார். ஆளுநர் ரவி முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஆவார்.காவல் மற்றும் நிர்வாகப் பணியில் அனுபவம் மிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|