தேர்வு உயிரை விடப் பெரியதல்ல,நடிகர் சூர்யாவின் காணொளிப் பதிவு
சேலம் மாவட்டம் கூடலூர் கிராமம், தனுஷ், அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமம் கனிமொழி, வேலூர் மாவட்டம் காட்பாடி தலையாரம்பட்டு கிராமம் சௌந்தர்யா என்று நெஞ்சில் மருத்துவர் கனவை வளர்த்த பிஞ்சுகள் துளிர்க்கும் முன்பே கருகியுள்ளன. இவ்வேளையில் நடிகர் சூர்யா காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பரிட்சை உயிரை விடப் பெரிதல்ல என்று கூறியுள்ளார்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற பாரதியின் வாசகத்தோடு ஆரம்பிக்கிறது காணொளி. மாணவர்கள் அச்சமின்றி நம்பிக்கையோடு இருக்க வேண்டும் கவலையும், வேதனையும் குறையும் தன்மை உடையது. பரிட்சை உயிரை விடப் பெரியது கிடையாது. மனது கஷ்டமாக இருக்கும் போது பெற்றோர் ஆசிரியரிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். தற்கொலை என்பது உங்களை நேசிப்பவர்க்கும் பெற்றோருக்கும் நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. தேர்வு மட்டுமே வாழ்வல்ல. சாதிக்கப் பல காரியங்கள் உண்டு என்று தன்னுடைய காணொளிப் பதிவில் கூறியுள்ளார் சூர்யா.
|