மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் ,Made in Tamilnadu என்று கூறப்படும் நிலை உருவாக வேண்டும் முதல்வர் முக ஸ்டாலின்
"ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு" என்ற பெயரில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு தொழில் ஏற்றுமதி மாநாடு நடைபெற்றது.முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து,தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு சிறு மற்றும்நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கானஏற்றுமதி கையேடு ஆகியவற்றை வெளியிட்டார்.
தொழில்துறை வளர்கிறது என்றால் அதில் அனைத்து துறையின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. இதுபோன்ற மாநாடுகள் கண்காட்சிகள் சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற வேண்டும். இன்று 2120 கோடி மதிப்பீட்டிலான 24 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதனால் 40,698 இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர்.
மின் வாகனங்கள், மின்சக்தி கலங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், மின்னணுவியல் வான்வெளி,பாதுகாப்பு துறைகளும் முன்னேற்றம் காணவேண்டும். தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும். உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்திய தயாரிப்பு என்று கூறப்படுகிறது (Made in India).உலகம் முழுவதும் தமிழ்நாடு தயாரிப்பு (Made in Tamilnadu ) என்று கூறப்படும் நிலை உருவாக வேண்டும். அதற்கான முன்னேற்றத் திட்டங்களை அரசு முன்னெடுக்கும் என்று கூறியுள்ளார்.
|