பதினோராம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இசைத்தமிழ் இருவராக இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான்
மாநிலப் பாடத்திட்டத்தின் பதினோராம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இசைத்தமிழ் இருவர் என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜா மற்றும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களைப் பற்றிய பாடங்கள் இடம் பெற்றுள்ளன.
1,6,9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாட நூல்கள் தமிழக அரசினால் வெளியிடப்பட்டுள்ளன. பதினோராம் வகுப்பு பொதுத் தமிழில் 'சிம்ஃபொனி தமிழர்' என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜா,'ஆஸ்கர் தமிழர்' என்ற தலைப்பில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இடம்பெற்றுள்ளனர். இப்பாடத்தில் தமிழ்நாடு தாண்டி உலகம் முழுவதும் இரசிக்கப்பட்ட இந்த இரு தமிழர்களின் இசைப்படைப்புகள் மற்றும் இருவரின் இசைப்பங்களிப்புகள் சிறப்புற விளக்கப்பட்டுள்ளன.
|