2010-2019 செம்மொழி தமிழ் விருதுகள் அறிவிப்பு
செம்மொழி தமிழ் விருது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் விருதாகும்.2004-ஆம் ஆண்டு தமிழ்மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. செம்மை நிறை மொழியான தமிழுக்கென்று தனித்த ஒரு நிறுவனமாக 2008-ஆம் ஆண்டு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைந்தது.
கலைஞர் மு. கருணாநிதி சொந்த நிதியாக ரூபாய் 1 கோடி வழங்கி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையை இந்நிறுவனத்தில் அமைத்தார். இதன் மூலமாக கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, ரூ 10 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ், கருணாநிதியின் உருவச்சிலையுடன் வழங்கப்படுகிறது.
செம்மொழி தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பினை அளிப்பவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.2009 ஆம் ஆண்டு முதல் விருது, பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பாப்போலாவுக்கு வழங்கப்பட்டது.2010-2019 வரையிலான விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன. தற்போது பதவியேற்றுள்ள அரசு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி 2010-2019 வரையிலான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1.2010-முனைவர் V.S.இராஜம்(Former Senior Lecturer, Department South Asia Regional Studies,University of Pennsylvania) 2.2011-பேராசிரியர் பொன் கோதண்டராமன் (முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை) 3.2012-பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி (முன்னாள் துணைவேந்தர்,தமிழ்ப் பல்கலைக்கழகம்) 4.2013-பேராசிரியர் ப. மருதநாயகம் (முன்னாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், முன்னாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்) 5.2014-பேராசிரியர் கு. மோகனராசு முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் திருக்குறள் ஆய்வு மையம்,சென்னைப் பல்கலைக்கழகம்) 6.2015-பேராசிரியர் மறைமலை இலக்குவனார் (முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக்கல்லூரி) 7.2016-பேராசிரியர் கா.ராஜன் (முன்னாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்) 8.2017-பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ் (Professor and head of the institute of indology and Tamil studies, cologne University, Germany) 9.2018-கவிஞர் ஈரோடு தமிழன்பன் (முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக்கல்லூரி,சென்னை) 10.2019-பேராசிரியர்கு.சிவமணி (முன்னாள் முதல்வர், கரந்தை புலவர் கல்லூரி, தஞ்சாவூர் மற்றும் திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை)
|