கவிஞர் பிறைசூடன் இயற்கை எய்தினார்
பிறைசூடன் அவர்கள் சிறந்த கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமாக அறியப்பட்டவர். திரைப்படங்களில் வசனமும் எழுதியுள்ளார்.1956 பிப்ரவரி 6 அன்று பிறந்தவர். திருவாரூர் நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது முதல் பாடல் சிறை என்ற திரைப்படத்திற்காக எம். எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையில் ஒலித்தது.1400 திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார். 1996 ஆம் ஆண்டு சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றவர். மேலும் இரண்டு முறை சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றிருக்கிறார். கலைச் செல்வம்,கபிலர் விருதுகளும் பெற்றவர். தாயகம்,கேளடி கண்மணி,இதயம் என்ராசாவின் மனசிலே போன்றவை இவர் பாடல் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற படங்களாகும். ஸ்ரீராமராஜ்யம் படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார். 65 வயதினை அடைந்த பிறைசூடன் அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.
|