இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்
இல்லம் தேடி கல்வித் திட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் துவங்கி வைக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இடைநிற்கும் நிலை ஆகியவற்றை தடுக்கும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது இத்திட்டம்.ரூபாய் 200 கோடி இத்திட்டத்திற்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றினால் சரியாக கல்வி பயிலும் வாய்ப்பினை இழந்து கற்றலிலிருந்து பின்தங்கிய மாணவர்களுக்காக அமைகிறது இத்திட்டம்.மாலை ஒரு மணிநேரம் தன்னார்வலர்கள் மூலமாக நடத்தப்பட இருக்கிறது. பாடல்கள் புதிர்,விளையாட்டுகள் கணித செயல்பாடுகள், எளிதான அறிவியல் சோதனைகள் என இக்கல்வி முறை அமையவிருக்கிறது. இத்திட்டம் ஆறு மாதங்கள் செயல்படும். பின்தங்கிய கற்க சிரமமும் குழந்தைகளை கருத்தில் கொண்டு அமையவிருக்கும் இத்திட்டம் பாராட்டுக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
|