வீரமாமுனிவரின் பிறந்த தினம்
வேற்று நாட்டினைச் சேர்ந்தவராக இருந்தும் ஒப்பற்ற தமிழ்ப்பணி புரிந்தவர் வீரமாமுனிவர். திருக்குறள்,தேவாரம், திருப்புகழ்,நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை ஐரோப்பிய மொழியில் வெளியிட்டுள்ளார். தமிழ்-இலத்தீன் அகராதி,தமிழ் போர்ச்சுகீசிய அகராதி, சதுரகராதி என இவருடைய தமிழ்ப் பணிகள் குறிப்பிடத்தக்கவை.
கிறித்தவ மறை பரப்பிற்காக தமிழ் கற்ற இவர் தமிழில் புலமையடைந்து இலக்கணம்,இலக்கியம், அகராதி ஆகியவற்றை எழுதியுள்ளார். பரமார்த்த குரு கதைகள் இவருடையது. மற்றும் பல நூல்களை தமிழில் எழுதியுள்ளார்.
இவரது இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி. தமிழறிந்த பின்னர் "தைரியநாதன்" என்றும் அது வடமொழி பெயர் என்பதால் தூய தமிழில் "வீரமாமுனிவர்" என்றும் தன் பெயரை மாற்றிக் கொண்டவர்.
இவ்வாறாக தமிழ் வளர்த்தெடுத்த வீரமாமுனிவரின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் விதமாக, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும், "வீரமாமுனிவர்" மற்றும் "வீரமாமுனிவரின் கையெழுத்துப்பிரதி" ஆவணத்தின் அச்சுப்பிரதியான "சித்திரக்கதைகள்" ஆகிய புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
|