தூய்மை இந்தியா~இரண்டு விருதுகள் பெற்றது தமிழகம்
பிரதமர் மோடி அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட திட்டமே தூய்மை இந்தியா திட்டம்.இத்திட்டத்தின் கீழ் இந்திய அரசின் வீட்டுவசதி வாரியமும், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகமும் விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த நகராட்சி,மாநகராட்சி, பேரூராட்சிகளுக்கு வழங்கி வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற இதற்கான விழாவில் தமிழகத்திற்கென்று இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூய்மையான நகரங்களுக்கான பிரிவில் சென்னை மாநகராட்சி,மாநில தலைநகரங்களில் சிறந்த முன்னோடி தலைநகர முயற்சிக்கான விருதினைப் பெற்றது.இந்திய நகரங்களில் வைத்தீஸ்வரன் பேரூராட்சி சிறந்த தனித்திறன் செயல்பாட்டிற்குரிய விருதினைப் பெற்றது. இவ்விருதுகளை குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
|