முதல் பக்கத்தில் அச்சிடப்பட இருக்கிறது மாணவர்கள் பாலியல் புகார் தெரிவிப்பதற்காக எண்
பள்ளிகளில் மாணவர்களின் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப் புத்தகங்களில் முதல் பக்கத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார்களை தெரிவிப்பதற்கான, தொலைபேசி எண்கள் இடம்பெறும் என்று கூறியிருக்கிறார்.
1098,14417 ஆகிய தொலைபேசி எண்கள் இரப்பர் ஸ்டாம்ப் மூலமாக நோட்டு மற்றும் புத்தகங்களில் இடம் பெறும் என்று அமைச்சர் கூறியிருக்கிறார். மேலும் அவர் மாவட்டம்தோறும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள்,மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே அரசின் விருப்பம்,பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் தயங்காமல் புகார்களை தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கும் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .
|