தமிழகத்திலிருந்து முதல் பெண் அவசர ஊர்தி (108) ஓட்டுநர்
தமிழக அரசு வீரலட்சுமி என்ற பெண்ணை அவசர ஊர்தி ஓட்டுனராக நியமித்துள்ளது.இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் அவசர ஊர்தி ஓட்டுனர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
வீரலட்சுமி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர். சிறந்த நான்கு சக்கர வாகன ஓட்டுநராக இருக்கும் இவர் கொரோனா பாதிப்பின் போது அரசின் அவசர ஊர்தி ஓட்டுனராக இருந்துள்ளார்.பல நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தற்போது அவரது சேவைக்காகவும் ஓட்டுனர் திறமைக்காகவும் அவசர ஊர்தி ஓட்டுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
|