நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
தமிழ் இலக்கிய உலகில் புதுமைகளைக் கொணர்ந்து புரட்சி சிந்தனைகளை விதைத்து தமிழ்ச் சமுதாயத்திற்கு புத்துயிரூட்டிய கவிஞர் சுப்பிரமணிய பாரதி. அவரது பிறந்த தினம் தலைவர்கள் மற்றும் மக்களால் ஆர்வமுடன் நினைவு கூரப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகின்றது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனது கீச்சக பக்கத்தில், " நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா! திறம்பாட வந்த மறவன்!அறம் பாட வந்த அறிஞன்! படரும் சாதிப் படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் இன்று,தமிழுக்கு தொண்டு செய்த பைந்தமிழ் தேர்ப்பாகன் நினைவைப் போற்றும் நமது அரசின் முயற்சிகள் என்றும் தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.
|