அரசு மற்றும் தனியார் விழா நிகழ்வுகளில் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் இடம் பெற வேண்டும்-அரசாணை வெளியீடு
நாட்டுப்புற கலைகள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களை காக்கும் மற்றும் போற்றும் நோக்கோடு தமிழக அரசு, அரசு மற்றும் தனியார் விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்ததானஅரசின் செய்திக்குறிப்பில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலை நிகழ்வுகள் இடம் பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நாட்டுப்புற கலைகளை அரசின் விழா நிகழ்வுகளில் ஒரு பகுதியாக்கும் நோக்கத்துடன் தொழில் மற்றும் வணிக வரித்துறை ஆணையம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டுப்புற கலைகளை பாதுகாத்து அதனை வரும் தலைமுறையிடம் கொண்டு செல்லும் வகையில் செயல்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
|