தற்போது ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள 24 முதுமக்கள் தாழிகள்
ஆதிச்சநல்லூர் நாகரீகம் 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என அறியப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பகுதியானது பெரியஇடுகாடாக இருந்துள்ளது. இங்கு தாழிகளில் (பானைகளில்) மனிதர்களை அல்லது அவர்களது உடல் பகுதிகளை அல்லது அவரது சாம்பலை வைத்து அவர் பயன்படுத்திய, அவரோடு தொடர்புடைய பொருட்களையும் வைத்து புதைக்கப்பட்டிருக்கிறது. இப்பொருள்கள் மூலம் மிகச்சிறந்த பழமையான நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
தற்போது ஒரே குழியில் 24 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து இங்கு அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன.சரித்திரத்தினை மாற்றி எழுதும் அளவுக்கு பழமையும் மிகச்சிறந்த நாகரிகமும் உள்ள பகுதியாக தமிழர் நாம் வாழும் பகுதி இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|