கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ய தமிழக தொல்லியல் துறை நிதியுதவி
சிவகங்கை மாவட்டம் கீழடிப் பகுதியில் தமிழக தொல்லியல் துறையினரால் தற்போது ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய தொல்லியல் துறையின் கீழ் அமர்நாத் ராமகிருஷ்ணன்,ஸ்ரீ ராமன் ஆகியோர் ஆய்வு செய்தபோது கிடைத்த 70-க்கும் மேலான பொருட்களை கண்டெடுத்தனர். இப்பொருட்களை கரிம ஆய்வு செய்வதில் மத்திய தொல்லியல் துறை முயற்சியேதும் எடுக்காதையடுத்து தமிழக தொல்லியல் துறை அதற்கான நிதியுதவியினை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை மத்திய தொல்லியல் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே விரைவில் கரிம பகுப்பாய்வுகள் நடைபெற இருக்கின்றன.
|