LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இலக்கியத்தின் உயர் விருதுகளைப் பெறும் இரு தமிழர்கள்!

இலக்கியத்தின் உயர் விருதுகளைப் பெறும் இரு தமிழர்கள்!

சாகித்திய அகாதமி பெறும் அம்பை

சாகித்திய அகாதமி இலக்கிய உலகின் மிகச் சிறந்த விருதாகக் மதிக்கப்படுகிறது. இவ்விருது  ஒரு இலட்சம் பரிசுத் தொகையுடன், பட்டயத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை தமிழ்ப் பெண் படைப்பாளர் அம்பை இவ்வாண்டு பெறுகிறார். 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற இவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் 24 மொழிகளில் உள்ள நூல்களில் இருந்து தேர்ந்தெடுத்து இவ்விருது வழங்கப்படுகிறது.

அம்பையின் இயற்பெயர் சி.எஸ். லட்சுமி ஆகும். இவர் கோயம்புத்தூரில் பிறந்தவர். தமிழ், ஆங்கிலம்,இந்தி ஆகிய மொழிகளில் புலமை உடையவர். 1960-இல் தொடங்கியுள்ளது இவரது இலக்கியப் பயணம். 'சிறகுகள் முறியும்','வீட்டின் மூலையில் ஒரு சமையலறை','காட்டில் ஒரு மான்' ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க சிறந்த படைப்புகள். இவரது படைப்புகள் பெண்மை மற்றும் பெண்ணியத்தினை கருப்பொருளாகக் கொண்டு இயங்குகின்றன.

பால சாகித்திய புரஸ்கார் விருது பெறும் மு.முருகேஷ்

பால சாகித்திய விருதானது குழந்தைகள் இலக்கியத்திற்கென்று வழங்கப்பட்டு வருகிறது. மு.முருகேஷ் 30 ஆண்டுகால இலக்கியப் பயணம் உடையவர்.  திருக்கோகர்ணம்பகுதியைச் சேர்ந்தவர். தற்போது திருவண்ணாமலை வந்தவாசியில் வசித்து வருகிறார். இவர் கவிஞர், எழுத்தாளர்,ஆசிரியர், கவிஞர்,கல்வி ஆலோசகர் எனப் பன்முகம் கொண்டவர். மு.முருகேஷ் அவர்களின் 'குழந்தைகள் சிறுகதைகள்' புத்தக பூங்கொத்தில் இடம் பெற்றுள்ளது. 'சின்னச் சிறகுகளால் வானை அளப்போம்', ,'குழந்தைகளல்ல குழந்தைகள்' போன்றவை இவரது மிகச் சிறந்த படைப்புகள். 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற இவருடைய நூல் தற்போது பால சாகித்திய புரஸ்கார் விருதுக்காக தேர்வாகியுள்ளது.

by R.Gnanajothi   on 09 Jan 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.