|
|||||
இலக்கியத்தின் உயர் விருதுகளைப் பெறும் இரு தமிழர்கள்! |
|||||
இலக்கியத்தின் உயர் விருதுகளைப் பெறும் இரு தமிழர்கள்! சாகித்திய அகாதமி பெறும் அம்பை சாகித்திய அகாதமி இலக்கிய உலகின் மிகச் சிறந்த விருதாகக் மதிக்கப்படுகிறது. இவ்விருது ஒரு இலட்சம் பரிசுத் தொகையுடன், பட்டயத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை தமிழ்ப் பெண் படைப்பாளர் அம்பை இவ்வாண்டு பெறுகிறார். 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற இவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் 24 மொழிகளில் உள்ள நூல்களில் இருந்து தேர்ந்தெடுத்து இவ்விருது வழங்கப்படுகிறது. அம்பையின் இயற்பெயர் சி.எஸ். லட்சுமி ஆகும். இவர் கோயம்புத்தூரில் பிறந்தவர். தமிழ், ஆங்கிலம்,இந்தி ஆகிய மொழிகளில் புலமை உடையவர். 1960-இல் தொடங்கியுள்ளது இவரது இலக்கியப் பயணம். 'சிறகுகள் முறியும்','வீட்டின் மூலையில் ஒரு சமையலறை','காட்டில் ஒரு மான்' ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க சிறந்த படைப்புகள். இவரது படைப்புகள் பெண்மை மற்றும் பெண்ணியத்தினை கருப்பொருளாகக் கொண்டு இயங்குகின்றன. பால சாகித்திய புரஸ்கார் விருது பெறும் மு.முருகேஷ் பால சாகித்திய விருதானது குழந்தைகள் இலக்கியத்திற்கென்று வழங்கப்பட்டு வருகிறது. மு.முருகேஷ் 30 ஆண்டுகால இலக்கியப் பயணம் உடையவர். திருக்கோகர்ணம்பகுதியைச் சேர்ந்தவர். தற்போது திருவண்ணாமலை வந்தவாசியில் வசித்து வருகிறார். இவர் கவிஞர், எழுத்தாளர்,ஆசிரியர், கவிஞர்,கல்வி ஆலோசகர் எனப் பன்முகம் கொண்டவர். மு.முருகேஷ் அவர்களின் 'குழந்தைகள் சிறுகதைகள்' புத்தக பூங்கொத்தில் இடம் பெற்றுள்ளது. 'சின்னச் சிறகுகளால் வானை அளப்போம்', ,'குழந்தைகளல்ல குழந்தைகள்' போன்றவை இவரது மிகச் சிறந்த படைப்புகள். 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற இவருடைய நூல் தற்போது பால சாகித்திய புரஸ்கார் விருதுக்காக தேர்வாகியுள்ளது. |
|||||
by R.Gnanajothi on 09 Jan 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|