வீரமங்கை வேலுநாச்சியாருக்காக புது சாதனை நிகழ்த்திய தமிழ்ப்பெண்
குடியரசு தின விழாவின் அணிவகுப்பிற்காக தமிழகம் சார்பில் தயார் செய்யப்பட்ட ஊர்தி நிராகரிப்பை சந்தித்தது. வேலுநாச்சியார், பாரதியார்,வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் உருவ அமைப்புகள் அவ்வூர்தியில் இடம்பெற்றிருந்தன.
முத்துச்செல்வி என்ற பெண் வேலுநாச்சியார் வேடத்தில் குதிரை மீது அமர்ந்திருந்து, மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக அம்பினை எய்து யுனிக்கோ புத்தக சாதனையினை நிகழ்த்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது டெல்லியில் தமிழக உஊர்தி மறுக்கப்பட்டதையடுத்து வேலுநாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் விதமாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக கூறியுள்ளார். இவர் வண்டலூர், மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்.
இந்தியாவிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து வாளேந்திப் போராடிய முதல் பெண் வீராங்கனை வேலு நாச்சியார் ஆவார்.மேலும் இழந்த சிவகங்கை மண்ணை வெற்றிகரமாக மீட்டெடுத்து மீண்டும் ஆட்சி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
|