உடல்நலம் பேண உள்ளூர் பானங்களை பருகுங்கள்~தமிழ்நாடு அரசு
வெயில் காலத்தில் குளிர்ச்சியான பானங்களை பருக நாம் அதிகம் விரும்புகிறோம். நாம் அருந்தும் பானங்கள் உடலுக்கு நன்மை தருவதா என்று அறிந்து பருகுவது அவசியமானதாகும். உடல் நலனே உண்மையான செல்வம் என்பது இக் காலங்களில் அதிகம் நினைவுகூரப்படுகிறது. வெயில் காலங்களில் உடல் நலம் தரும் பாரம்பரிய உள்ளூர் பானங்களை பருக தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. இளநீர்,பதநீர் போன்ற பானங்களை பருகுவதால் உடல் நலனுக்கும் நல்லது, விவசாயிகளின் வருமானமும் உயரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இளநீர்,பதநீர்,நீர்மோர் வெள்ளரிக்காய், தர்பூசணி என உடலுக்கு உண்மையான குளிர்ச்சியினை தரும் பானங்களையும், பழங்களையும் எடுத்துக் கொள்வதால் உடல் நலம் இவ்வெயில் காலங்களில் சிறந்த முறையில் பேணப்படும் என்பதில் ஐயமில்லை.
|