LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    குழந்தை வளர்ப்பு - Bring up a Child Print Friendly and PDF

ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

 

சமூக வலைத்தலங்கள் குழந்தைகள் மீது மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறன. அதனால் உளவியல் ரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், அதன்மூலம் ஏற்படும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. கனனச்சிதறல், பார்வைக்குறைபாடு, மன அழுத்தம் என குழந்தைகள் மத்தியில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பெரிதாகிக் கொண்டே போகிறது. 
சமூக ஊடகங்களில் இருந்து குழந்தைகளை மீட்க உலகெங்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு நவம்பர் 28-ம் தேதி நிறைவேற்றியுள்ளது.
உலகத்திலேயே முதல் முறையாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் இந்த சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. சிறுவர்கள் லாக் இன் செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் அப்படித் தடுக்காத  சமூக வலைதளங்களுக்கு 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் சோதனை முறையில் வரும் ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட உள்ளது. இது முழுமையாக நடைமுறைக்கு வர ஓராண்டு ஆகும்.  ஏற்கெனவே பிரான்ஸிலும் சில  அமெரிக்க மாகாணங்களிலும் பெற்றோரின் அனுமதியில்லாமல் சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்டங்கள் உள்ளன. ஆனால் உலகிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய அரசு இதனை முழுமையாக தடை செய்யும் மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மசோதாவுக்கு 77 %  ஆஸ்திரேலிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். 

சமூக வலைத்தலங்கள் குழந்தைகள் மீது மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறன. அதனால் உளவியல் ரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், அதன்மூலம் ஏற்படும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. கனனச்சிதறல், பார்வைக்குறைபாடு, மன அழுத்தம் என குழந்தைகள் மத்தியில் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பெரிதாகிக் கொண்டே போகிறது. சமூக ஊடகங்களில் இருந்து குழந்தைகளை மீட்க உலகெங்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு நவம்பர் 28-ம் தேதி நிறைவேற்றியுள்ளது.உலகத்திலேயே முதல் முறையாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் இந்த சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

சிறுவர்கள் லாக் இன் செய்வதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் அப்படித் தடுக்காத  சமூக வலைதளங்களுக்கு 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் சோதனை முறையில் வரும் ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட உள்ளது. இது முழுமையாக நடைமுறைக்கு வர ஓராண்டு ஆகும்.  ஏற்கெனவே பிரான்ஸிலும் சில  அமெரிக்க மாகாணங்களிலும் பெற்றோரின் அனுமதியில்லாமல் சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் சட்டங்கள் உள்ளன. ஆனால் உலகிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய அரசு இதனை முழுமையாக தடை செய்யும் மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த மசோதாவுக்கு 77 %  ஆஸ்திரேலிய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். 

 

by   on 01 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள் பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்
குழந்தை வளர்ப்பு- மகிழ்வான அடித்தளம் அமைத்தல் குழந்தை வளர்ப்பு- மகிழ்வான அடித்தளம் அமைத்தல்
குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்! குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்!
எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால்  முடியும் - ஜான் ஹோல்ட் எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்
பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள் பெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்
சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி
மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு.. மொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி? -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..
குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன் குழந்தைகளின் கோடை விடுமுறையை கொண்டாட்டமாக்க ஒரு ஜில் யோசனை - விழியன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.