LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

237 கோடி ரூபாய்க்கு ஏலம் போன நடிகை ஜூடி கார்லேண்ட் காலணிகள்

புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான 'தி விசார்ட் ஆஃப் ஓஸ்'-இல் (The Wizard of Oz) நடிகை ஜூடி கார்லேண்ட் அணிந்திருந்த ஒரு ஜோடி ரூபி சிவப்பு காலணிகள், அமெரிக்காவில் நடந்த ஒரு ஏலத்தில் 28 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 237 கோடி ரூபாய்) விற்கப்பட்டுள்ளன.


கடந்த 1939இல் வெளியான இந்தத் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டதில், நான்கு ஜோடி காலணிகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதில், ஒரு ஜோடி புகழ்பெற்ற ஹீல்ஸ் காலணிகள் தான் சமீபத்தில் ஏலமிடப்பட்டன. 
இதற்கான ஆன்லைன் ஏலம் ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. இந்தக் காலணிகளை ஏலம் விட்ட ஹெரிட்டேஜ் ஏல நிறுவனம், காலணிகளுக்குச் சுமார் 25 கோடி ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 237 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.


ஏலத்தில் இதுவரை விற்கப்பட்ட திரைப்படங்கள் தொடர்பான பழங்காலப் பொருட்களில், அதிக விலைக்கு ஏலம் போனது இந்தக் காலணிகள் தான் என்று ஹெரிட்டேஜ் ஏல நிறுவனம் கூறுகிறது.
பிரபலப் பாப் பாடகி அரியானா கிராண்டே நடித்த 'விக்ட்' (Wicked) திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படம், 'தி விசார்ட் ஆஃப் ஓஸ்' கதையின் முந்தைய பாகம். எனவே, இத்திரைப்படம் வெளியான பிறகு, 'தி விசார்ட் ஆஃப் ஓஸ்' திரைப்படம் குறித்து மீண்டும் பேசப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காலணிகள் ஏலம் விடப்பட்டன.


'தி விசார்ட் ஆஃப் ஓஸ்' திரைப்படம் 1939ஆம் ஆண்டில் வெளியானபோது, அதில் நடித்த நடிகை ஜூடி கார்லேண்டுக்கு அப்போது பதினாறு வயது தான். பிரபல ஊடகமான 'வெரைட்டி' வெளியிட்ட 'உலகின் 100 சிறந்த திரைப்படங்கள்' பட்டியலில், இந்தத் திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தத் திரைப்படம், 1900ஆம் ஆண்டில் எல்.பிராங்க் பாம் எழுதிய 'தி வொண்டர்ஃபுல் விசார்ட் ஆஃப் ஓஸ்' என்ற குழந்தைகள் கதைப் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.


புத்தகத்தின் கதைப்படி இந்தக் காலணிகள் வெள்ளியால் உருவானவை என்றாலும், திரைப்படக்குழுவினர் 'டெக்னிகலர்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நினைத்ததால், படத்தில் சிவப்பு காலணிகள் காட்சிப்படுத்தப்பட்டன. திரைப்படம் மற்றும் புத்தகம் இரண்டிலும், இந்தக் காலணிகளை வைத்து ஒரு முக்கிய காட்சி உள்ளது. அதில் கதையின் நாயகி டோரத்தி, 'ஓஸ்' (Oz) எனப்படும் மந்திர உலகத்தை விட்டு வெளியேறி, தனது வீட்டிற்குத் திரும்புவதற்காக, தனது காலணிகளை மூன்று முறை அழுத்தி, "வீட்டைப் போல வேறு இடம் ஏதும் இல்லை" என்று மீண்டும் மீண்டும் கூறுவது போல ஒரு காட்சி உள்ளது.


படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பல ஜோடி காலணிகளில், 4 மட்டுமே இன்னும் அப்படியே உள்ளன.  அதில் ஒன்று 'ஸ்மித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகத்தில்' காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



by hemavathi   on 09 Dec 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போது  நடிகர் திலகம் கணேசனும்  , ஜெமினியும் 1960 ல் நடந்த ஒரு திருமணத்தின் போது நடிகர் திலகம் கணேசனும் , ஜெமினியும்
பாடகி உமா ரமணன் காலமானார். பாடகி உமா ரமணன் காலமானார்.
சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசுப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு. சண்டைப்பயிற்சிக்கான சர்வதேச விருது பட்டியல்: அனல் அரசுப் பணியாற்றிய 'ஜவான்' திரைப்படம் தேர்வு.
மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது மாமன்னன்’ படத்துக்காக வடிவேலுக்கு சிறந்த நடிகர் விருது
நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ்  திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் நவம்பர் 3, திரைக்கு வரும் லைசன்ஸ் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்
டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. டொரான்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு பிரிவில் 2022-2023 ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக யாத்திசை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது..
பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார் பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
தேசிய திரைப்பட விருதுகள் 2023 தேசிய திரைப்பட விருதுகள் 2023
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.