LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

அருள்துறையின் கருப்பொருள்

 

அறத்தைக் காக்க வல்ல சிந்தனையாளர்கள், ஆட்சிப் பொறுப்பு உடையோர், செல்வந்தர்கள், தொழில் நிபுணர்கள், மக்கள் தலைவர்கள் யாவரும் இறையுணர்வில் முழுமை பெற வேண்டும். அப்போது தான் மக்...களை சீரிய முறையில் வழி நடத்தவும் வாழ வைக்கவும் முடியும்.
இறையுணர்வில் முழுமை பெறுவதற்குச் சிறந்த முறை தன்னிலை விளக்கமாகும். இதனை ஆங்கிலத்தில் Self Realisation என்று சொல்வார்கள். இதுவே அருள் துறையின் கருப்பொருள். இறை வழிபாட்டின் உச்சம். உயிர் வழிபாட்டின் உறைவிடம். அமைதியைக் காக்கும் அரண். தன்னிலை விளக்கத்தால் அறிவும் உயிரும் உணரப் பெறும். முடிவில் தெய்வ நிலையும் அகக் காட்சியாகும், தன்னை உணர்ந்தால் உயிர்கள், உலகம், தெய்வம் யாவும் அகக் காட்சியில் இணைந்து காணும் முறையான அக நோக்குப் பயிற்சி மூலம் ஒரு மனிதன் எளிதில் இந்நிலை பெறலாம். இத்துறையில் தேர்ந்த வழிகாட்டிகள் இந்நாட்டில் பலர் உள்ளனர்.
உடலாக, அறிவாக, உயிராக உள்ள தன்னிலே தலைவனாக உள்ள மெய்ப் பொருளை உணர்வதே தன்னிலை விளக்கம். இந்தத் தெளிவிலே ஒவ்வொரு உயிரினிடத்தும் தெய்வத்தின் இருப்புநிலை, ஆட்சி நிலை விளங்குமல்லவா? இவ்வுயர்ந்த நோக்கிலே எல்லா உயிர்களும் ஓடே மூலத்தை அடிப்படையாகக் கொண்டே தோன்றி இயங்கி வாழ்கின்றன, என்ற பேருண்மை அகக் காட்சியாகின்றது. இத்தகைய அறிவின் தெளிவிலே, ஒழுக்கமும், ஈகையும் இயல்பாக மலரும் கடமையும் பொறுப்பும் சிறப்பாக அமையும். தனி மனிதன் வாழ்விலே அமைதியுண்டாகும். இவ்வமைதி அன்பாகவும், கருணையாகவும் விரிந்து சமுதாயத்தில் அமைதியைப் பரப்பும். மேலும் அது உலக விரிவாகச் செயல்படும் போது உலக நாடுகளிடையேயும் அமைதியை நிலை நாட்டும். எனவே தன்னிலை விளக்கமும், அவ்விளக்கத்தின் வழியே வாழும் அருள் நெறியும் உலக அமைதிக்குச் சிறந்த வழிகள்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

அறத்தைக் காக்க வல்ல சிந்தனையாளர்கள், ஆட்சிப் பொறுப்பு உடையோர், செல்வந்தர்கள், தொழில் நிபுணர்கள், மக்கள் தலைவர்கள் யாவரும் இறையுணர்வில் முழுமை பெற வேண்டும். அப்போது தான் மக்...களை சீரிய முறையில் வழி நடத்தவும் வாழ வைக்கவும் முடியும்.

 

இறையுணர்வில் முழுமை பெறுவதற்குச் சிறந்த முறை தன்னிலை விளக்கமாகும். இதனை ஆங்கிலத்தில் Self Realisation என்று சொல்வார்கள். இதுவே அருள் துறையின் கருப்பொருள். இறை வழிபாட்டின் உச்சம். உயிர் வழிபாட்டின் உறைவிடம். அமைதியைக் காக்கும் அரண். தன்னிலை விளக்கத்தால் அறிவும் உயிரும் உணரப் பெறும். முடிவில் தெய்வ நிலையும் அகக் காட்சியாகும், தன்னை உணர்ந்தால் உயிர்கள், உலகம், தெய்வம் யாவும் அகக் காட்சியில் இணைந்து காணும் முறையான அக நோக்குப் பயிற்சி மூலம் ஒரு மனிதன் எளிதில் இந்நிலை பெறலாம். இத்துறையில் தேர்ந்த வழிகாட்டிகள் இந்நாட்டில் பலர் உள்ளனர்.

 

உடலாக, அறிவாக, உயிராக உள்ள தன்னிலே தலைவனாக உள்ள மெய்ப் பொருளை உணர்வதே தன்னிலை விளக்கம். இந்தத் தெளிவிலே ஒவ்வொரு உயிரினிடத்தும் தெய்வத்தின் இருப்புநிலை, ஆட்சி நிலை விளங்குமல்லவா? இவ்வுயர்ந்த நோக்கிலே எல்லா உயிர்களும் ஓடே மூலத்தை அடிப்படையாகக் கொண்டே தோன்றி இயங்கி வாழ்கின்றன, என்ற பேருண்மை அகக் காட்சியாகின்றது. இத்தகைய அறிவின் தெளிவிலே, ஒழுக்கமும், ஈகையும் இயல்பாக மலரும் கடமையும் பொறுப்பும் சிறப்பாக அமையும். தனி மனிதன் வாழ்விலே அமைதியுண்டாகும். இவ்வமைதி அன்பாகவும், கருணையாகவும் விரிந்து சமுதாயத்தில் அமைதியைப் பரப்பும். மேலும் அது உலக விரிவாகச் செயல்படும் போது உலக நாடுகளிடையேயும் அமைதியை நிலை நாட்டும். எனவே தன்னிலை விளக்கமும், அவ்விளக்கத்தின் வழியே வாழும் அருள் நெறியும் உலக அமைதிக்குச் சிறந்த வழிகள்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

 

by Swathi   on 17 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.