உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் உலகிலேயே உயர்ந்த மலை சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை புரிந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அருணிமா சின்கா தேசிய அளவில் கைப்பந்து போட்டிகளில் பங்கேற்ற இவர் கடந்த 2011ம் ஆண்டு, லக்னோவிலிருந்து டில்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த போது சமூக விரோதிகளால் ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்தில் ஒரு காலையும் இழந்தார். பிறர் தன்னை பரிதாபமாக பார்ப்பதை தவிர்க்க எண்ணிய அவர் சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என எண்ணினார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மலையேற்றக் குழுவுடன் சேர்ந்து மலை ஏறுவதில் பயிற்சி பெற்றார். இதன் பலனாக நேற்று காலை, 10:55 மணிக்கு எவரஸ்ட் சிகரத்தின் உச்சத்தை அவர் அடைந்தார். மேலும் எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்று திறனாளி என்ற சாதனையும் அவர் படைத்தார். இந்த சாதனையை படைக்க எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய, உலகின் முதல் இந்தியப் பெண் என போற்றப்பட்ட, பச்சேந்திரி பால், அருணிமா சின்காவுக்கு தேவையான பயிற்ச்சிகளை அளித்தார்.
|