LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

அருத்தபஞ்சகம்

8.1:
அமலனவியாதசுடர் அளவில்லா வாரமுதம்
அமலவுருக்குணங்களணி ஆயுதங்களடியவர்கள்
அமலவழியாத நகர் அழிந்தெழுங்காவுடனெல்லாங்
கமலையுடனரசாளும் கரிகிரிமேற்காவலனே.

8.2:
உள்ளபொருளனைத்துக்கும் உருவநிலை கருமங்கள்
தெள்ளிசைவின்வசமாக்கித் திகழ்ந்துயிராயுறைகின்றா
னள்ளிருள்தீர்த்தடியவர்க்கு நலங்கொடுக்குந்திருவுருடனே
வள்ளலருளாளரெனும் வாரணவெற்பிறையவனே.

8.3:
பூதவுடல்புலன்கள்மனம் புல்லாவிபுந்தியெனும்
யாதுமலனாயிலகி யானெனுமின்னுண்ணறிவாய்ச்
சேதனனாயடிமையுமாம் உயிர்க்கெல்லாந்திண்ணுயிராய்த்
தீதலின்றித்திகழும் சீரத்திகிரித் திருமாலே.

8.4:
தானடைத்த குணங்கருவி தங்கிரிசைவழியொழுக்கி
யூனெடுத்துண்டுமிழ்ந்துழலும் உயிர்க்கெல்லாமுயிராகிக்
கானடத்திக்கமலையுடன் கண்டுகந்துவிளையாடுந்
தேனெடுத்தசோலைகள்சூழ் திருவத்தியூரானே.

8.5:
உய்யமுற விசையாதே ஒத்தவர்க்கே யடிமையுமாய்ப்
பொய்யுருவைத்தமக்கேற்றிப் புலன்கொண்டபயனேகொண்டு
ஐயுறவுமாரிருளும் அல்வழியுமடைந்தவர்க்கு
மெய்யருள்செய்திடும் திருமால்வேழமலைமேயவனே.

8.6:
விதைமுளையின்னியாயத்தால் அடியில்லாவினையடைவே
சதையுடல நால்வகைக்கும் சரணளிப்பானெனத்திகழ்ந்து
பதவியறியாது பழம்பாழிலுழல் கின்றார்க்குஞ்
சிதைவிலரு டருந்திருமா றிருவத்திநகரானே.

8.7:
எமநியம வாசனங்கள் இயலாவிபுலனடக்கந்
தமதறியுந்தாரணைகள் தாரையறாநினைவொழுக்கஞ்
சமமுடையசமாதிநலஞ் சாதிப்பார்க்கிலக்காகும்
அமரர்தொழுமத்திகிரி அம்புயத்தாளாரமுதே.

8.8:
புகலுலகில்லாது பொன்னருள் கண்டுற்றவர்க்கும்
அகிலகிலாவன்பர்க்கும் அன்றேதன்னருள் கொடுத்துப்
பகலதனாற் பழங்கங்குல்விடிவிக்கும், பங்கயத்தாள்
அகலகிலேனென்றுறையும் அத்திகிரியருள்முகிலே.

8.9:
இருவிலங்குவிடுத்து இருந்தசிறைவிடுத்து ஓர்நாடீயினாற்
கருநிலங்கள் கடக்கும்வழி காவலராற்கடத்துவித்துப்
பெருநிலங்கண்டுயிருணர்ந்து பிரியாமலருள்செய்யும்
உருநலங்கொண்டுறுந்திருவோடு உயரத்திகிரியானே.

8.10:
தந்திருமாதுடனே தாம் தனியரசாயுறைகின்ற
வந்தமில்பேரின்பத்தில் அடியவரோடெமைச் சேர்த்து
முந்தியிழந்தனவெல்லாம் முகிழ்க்கத்தந்தாட்கொள்ளு
மந்தமிலாவருளாழி அத்திகிரித் திருமாலே.

8.11:
அயன்பணியும்மத்திகிரி அருளாளரடியிணைமே
னயங்கள்செறிகச்சிநகர் நான்மறையோர் நல்லருளாற்
பயன்களிவையனைத்துமெனப் பண்டுரைத்தார்படியுரைத்த
வியன்கலைகளீரைந்தும் வேதியர்கட்கினியனவே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

அடிவரவு : அமலன், உள்ளபொருள், பூதவுடல், தானடைத்த,
உய்யுமுறவு, விதைமுளை, எமநியம, புகலுலகில், இருவிலங்கு,
விடுத்து, தந்திரு, அயன்பணியும்,வரியிருள்

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.