8.1: அமலனவியாதசுடர் அளவில்லா வாரமுதம் அமலவுருக்குணங்களணி ஆயுதங்களடியவர்கள் அமலவழியாத நகர் அழிந்தெழுங்காவுடனெல்லாங் கமலையுடனரசாளும் கரிகிரிமேற்காவலனே.
8.2: உள்ளபொருளனைத்துக்கும் உருவநிலை கருமங்கள் தெள்ளிசைவின்வசமாக்கித் திகழ்ந்துயிராயுறைகின்றா னள்ளிருள்தீர்த்தடியவர்க்கு நலங்கொடுக்குந்திருவுருடனே வள்ளலருளாளரெனும் வாரணவெற்பிறையவனே.
8.3: பூதவுடல்புலன்கள்மனம் புல்லாவிபுந்தியெனும் யாதுமலனாயிலகி யானெனுமின்னுண்ணறிவாய்ச் சேதனனாயடிமையுமாம் உயிர்க்கெல்லாந்திண்ணுயிராய்த் தீதலின்றித்திகழும் சீரத்திகிரித் திருமாலே.
8.4: தானடைத்த குணங்கருவி தங்கிரிசைவழியொழுக்கி யூனெடுத்துண்டுமிழ்ந்துழலும் உயிர்க்கெல்லாமுயிராகிக் கானடத்திக்கமலையுடன் கண்டுகந்துவிளையாடுந் தேனெடுத்தசோலைகள்சூழ் திருவத்தியூரானே.
8.5: உய்யமுற விசையாதே ஒத்தவர்க்கே யடிமையுமாய்ப் பொய்யுருவைத்தமக்கேற்றிப் புலன்கொண்டபயனேகொண்டு ஐயுறவுமாரிருளும் அல்வழியுமடைந்தவர்க்கு மெய்யருள்செய்திடும் திருமால்வேழமலைமேயவனே.
8.6: விதைமுளையின்னியாயத்தால் அடியில்லாவினையடைவே சதையுடல நால்வகைக்கும் சரணளிப்பானெனத்திகழ்ந்து பதவியறியாது பழம்பாழிலுழல் கின்றார்க்குஞ் சிதைவிலரு டருந்திருமா றிருவத்திநகரானே.
8.7: எமநியம வாசனங்கள் இயலாவிபுலனடக்கந் தமதறியுந்தாரணைகள் தாரையறாநினைவொழுக்கஞ் சமமுடையசமாதிநலஞ் சாதிப்பார்க்கிலக்காகும் அமரர்தொழுமத்திகிரி அம்புயத்தாளாரமுதே.
8.8: புகலுலகில்லாது பொன்னருள் கண்டுற்றவர்க்கும் அகிலகிலாவன்பர்க்கும் அன்றேதன்னருள் கொடுத்துப் பகலதனாற் பழங்கங்குல்விடிவிக்கும், பங்கயத்தாள் அகலகிலேனென்றுறையும் அத்திகிரியருள்முகிலே.
8.9: இருவிலங்குவிடுத்து இருந்தசிறைவிடுத்து ஓர்நாடீயினாற் கருநிலங்கள் கடக்கும்வழி காவலராற்கடத்துவித்துப் பெருநிலங்கண்டுயிருணர்ந்து பிரியாமலருள்செய்யும் உருநலங்கொண்டுறுந்திருவோடு உயரத்திகிரியானே.
8.10: தந்திருமாதுடனே தாம் தனியரசாயுறைகின்ற வந்தமில்பேரின்பத்தில் அடியவரோடெமைச் சேர்த்து முந்தியிழந்தனவெல்லாம் முகிழ்க்கத்தந்தாட்கொள்ளு மந்தமிலாவருளாழி அத்திகிரித் திருமாலே.
8.11: அயன்பணியும்மத்திகிரி அருளாளரடியிணைமே னயங்கள்செறிகச்சிநகர் நான்மறையோர் நல்லருளாற் பயன்களிவையனைத்துமெனப் பண்டுரைத்தார்படியுரைத்த வியன்கலைகளீரைந்தும் வேதியர்கட்கினியனவே.
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
அடிவரவு : அமலன், உள்ளபொருள், பூதவுடல், தானடைத்த, உய்யுமுறவு, விதைமுளை, எமநியம, புகலுலகில், இருவிலங்கு, விடுத்து, தந்திரு, அயன்பணியும்,வரியிருள்
|