LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF

ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-06-11-2015

பெயர் : P.தேவி, D/o.பத்மநாதன், பிறந்த தேதி : 12-05-1994, பிறந்த நேரம் : இரவு மணி 07.35, பிறந்த இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர், சந்திர தசை இருப்பு : 3-8-3.

Jathagam - 06-11-2015

 

எனது மகள் காதல் பண்ணுவாளா? எப்படிப்பட்ட திருமணம் நடக்கும்? படித்து வேலைக்குச் செல்வாளா? வேலை கிடைத்து வெளிநாடு செல்வாளா? குழந்தை பாக்யம் உண்டா? எங்களது பேச்சை என் பெண் வருங்காலத்தில் கேட்டு நடப்பாளா?

விருச்சிக லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் புதல்விக்கு 7ம் இடமான கணவ்ன் ஸ்தானத்தில் 4 கிரகங்கள் அமர்ந்திருப்பது நல்லதல்ல. அதுவும் சந்திரன், சுக்ரன், கிரகச் சேர்க்கை காதலையும் புதன் அமர்ந்து இருப்பது காதல் வாழ்க்கையும் குறிப்பிடும். மேலும் 7ம் இடமான கணவன் ஸ்தானத்திற்குரிய சுக்ரன் 7ல் அமர்ந்து அவர் 1,6க்குடைய செவ்வாய் சாரம் பெற்று செவ்வாய் 5ல் அமர்வது சுமாரான பலன் ஆகும். 7ம் இடம் ஆணையும் 5ம் இடம் என்பது காதலையும் குறிக்கும். எனவே தங்கள் பெண் ஜாதகத்தில் காதல் திருமணம் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. மேலும் கேது பகவான் 7ம் இடமான கணவன் ஸ்தானத்தில் அமர்வது உங்கள் ஜாதி, மதம், இனத்திற்கு அப்பாலுள்ள பையன் கணவனாக வருவான்.

தற்பொழுது உங்கள் புதல்விக்கு ராகு தசையில் கேது புத்தி 01-08-2016 வரை நடப்பில் உள்ளது. ராகு லக்னத்தில் அமர்ந்து அவர் 2,5க்குடைய குரு சாரம் பெற்று அந்தக் குரு 12ம் இடத்தில் அமர்வது உங்கள் புதல்வி உயர் கல்வி பயில்வதையும் பிற்காலத்தில் வெளியூர் வெளி மாநிலம் வெளிநாடு செல்வதையும் காட்டுகிறது. கண்டிப்பாக உங்கள் புதல்விக்கு குழந்தை பாக்யம் உண்டு. புத்திர ஸ்தானாதிபதியான குரு 12ல் இருப்பதும் அவர் ராகு சாரம் பெறுவதால் குழந்தை பாக்யத்தில் தடையேற்பட்டு குழந்தை பிறக்கும். உங்கள் புதல்வி விருச்சீக லக்னத்தில் செவ்வாய் வீட்டில் ஜனனமானதால் உங்கள் பேச்சை உங்கள் புதல்வி கேட்க மாட்டாள். ராகு தசை நடப்பதால் “துர்க்கையையும்”, “காளியையும்” வணங்கிவரச் சொல்லவும்.

 

ஜோதிட இமயம் அபிராமி சேகர்

maduraiabiramisekar@gmail.com

9994811158

 

by Swathi   on 01 Dec 2015  1 Comments
Tags: Thirumanam Nadakuma   Magal Thirumanam   Kulanthai Pakkiyam   குழந்தை பாக்கியம்   திருமணம் நடக்குமா   மகளுக்கு திருமணம் நடக்குமா     
 தொடர்புடையவை-Related Articles
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-06-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-06-11-2015
கருத்துகள்
10-Dec-2015 05:01:55 ச்ரிச்டினால் ஜ்ஹன்ஷி ராணி said : Report Abuse
வென் மி மர்ரியாகே வில் பெ டன் ?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.