LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஸ்ரீதேசிகப் பிரபந்தம்

அதிகாரசங்கிரகம்

2.1:
பொய்கைமுனிபூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல்வருங்குருகேசன் விட்டுசித்தன்
றுய்யகுலசேகரனம் பாணநாதன்
தொண்டரடிப்பொடிமழிசைவந்த சோதி
வையமெல்லாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
மங்கையர்க்கோனென்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகணாந் தெளிய வோதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே.

2.2:
இன்பத்திலிறைஞ்சுதலிலிசையும்பேற்றில்
இகழாத பல்லுறவிலிராக மாற்றில்தன்பற்றில் வினைவிலக்கில்தகவோக்கத்திற்
றத்துவத்தையுணர்த்துதலிற் றன்மையாகில்
அன்பர்க்கேயவதரிக்குமாயன்னிற்க
அருமறைகள் தமிழ் செய்தான் தாளேகொண்டு
துன்பற்ற மதுரகவிதோன்றக்காட்டுந்
தொல்வழியேநல்வழி கடுணிவார் கட்கே.

2.3:
என்னுயிர்தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர்குருக்கள்ணிரைவணங்கிப்
பின்னரளாற்பெரும்பூதூர்வந்த வள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கா னம்பி
நன்னெறியை யவர்க்குரைத்த வுய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன்சேனைநாத
னின்னமுதத்திருமகளென்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகளடைகின்றேனே.

2.4:
ஆரணநூல்வழிச் செவ்வை யழித்திடுமைதுகர்க்கு, ஓர்
வாரணமாய் அவர்வாதக்கதலிகள் மாய்த்தபிரான்
ஏரணிகீர்த்தி இராமானுசமுனி இன்னுரைசேர்
சீரணிசிந்தையினோம் சிந்தியோமினித்தீவினையே.

2.5:
நீளவந்து இன்றுவிதிவகையால்நினைவொன்றியநா
மீள வந்து இன்னும்வினையுடம் பொன்றிவிழுந்துழலாது
ஆளவந்தாரென வென்றருள் தந்து விளங்கிய சீர்
ஆளவந்தாரடியோம் படியோமினி யல்வழக்கே.

2.6:
காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளன்
மூளுந்தவநெறி மூடிய நாதமுனிகழலே
நாளுந்தொழுதொழுவோம் நமக்கார்நிகர்நானிலத்தே.

2.7:
ஆளுமடைக் கலமென்றெமை அம்புயத்தாள்கணவன்
றாளினிசேர்ந்து எமக்குமவைதந்த தகவுடையார்
மூளுமிருட்கள்விளமுயன்று ஓதியமூன்றினுள்ள
நாளுமுகக்கவிங்கே நமக்கோர் விதிவாய்க்கின்றதே.

2.8:
திருவுடன் வந்த செழுமனிபோல் திருமாலிதய
மருவிடமென்ன மலரடிசூடும்வகைபெருநாங்
கருவுடன் வந்தகடுவினையாற்றில் விழுந்தொழுகா
தருவுடன் ஐந்தறிவார் அருள்செய்ய அமைந்தனரே.

2.9:
அமை யாவிவையெனுமாசையினால் அறுமூன்று உலகிற்
சுமையான கல்விகள் சூழவந்தாலும் தொகை இவை என்று
இமையா விமையவரேத்திய எட்டிரண்டெண்ணிய நஞ்
சமயாசிரியர் சதிர்க்குந்தனினிலை தந்தனரே.

2.10:
நிலைதந்த தாரகனாய் நியமிக்குமிறைவனுமாய்
இலதொன்றனாவகை எல்லாந்தனதெனுமெந்தையுமாய்த்
துலையொன்றிலையெனநின்ற துழாய்முடியானுடம்பாய்
விலையின்றிநாமடியோமெனும் வேதியர்மெய்ப்பொருளே.

2.11:
பொருளொன்றென நின்ற பூமகள் ணாதன், அவனடி சேர்ந்து
அருளொன்றுமன்பன் அவங்கொளுபாயமைந்தபயன்
மருளொன்றியவினை வல்விலங்கென்று இவையைந்தறிவார்
இருளொன்றிலாவகை எம்மனந்தேற வியம்பினரே.

2.12:
தேறவியம்பினர் சித்துமசித்துமிறையுமென
வேறுபடும் வியன் றத்துவ மூன்றும், வினையுடம்பிற்
கூறுபடுங்கொடுமோகமுந்f தானிறையாங்குறிப்பு
மாறநினைந்தருளால் மறைநூறந்தவாதியரே.

2.13:
வாதியர்மன்னுந்தருக்கச் செருக்கின் மறைகுலையச்
சாதுசனங்களடங்க நடுங்கத் தனித்தனியே
யாதியெனாவகை யாரணதேசிகர்சாற்றினர், நம்
போதமருந்திருமாதுடன் நின்றபுராணனையே.

2.14:
நின்றபுராணனடியிணையேந்தும் நெடும்பயனும்
பொன்றுதலேநிலையென்றிடப் பொங்கும்பவக்கடலும்
நன்றிதுதீயதிதென்று நவின்றவர்நல்லருளால்
வென்றுபுலங்களை வீடினைவேண்டும் பெரும்பயனே.

2.15:
வேண்டும்பெரும்பயன் வீடென்றறிந்து வீதிவகையா
னீண்டூங் குறிகியு நிற்கும் நிலைகளுக்கேற்குமன்பர்
மூண்டொன்றில் மூலவினைமாற்றுதலில் முகுந்தனடி
பூண்டன்றி மற்றோர்புகலொன்றிலையெனநின்றனரே.

2.16:
நின்றநிலைக்குற நிற்குங்கருமமும் நேர்மதியா
னன்றெனநாடியஞானமும் நல்குமுட்கண்ணுடையர்
ஒன்றியபத்தியும் ஒன்றுமிலாவிரைவார்க்கு, அருளால்
அன்றுபயந்தருமாறும் அறிந்தவரந்தணரே.

2.17:
அந்தணரந்தியரெல்லையில்நின்ற அனைத்துலகு
நொந்தவரேமுதலாக நுடங்கியனன்னியராய்
வந்தடையும்வகை வன்தகவேந்திவருந்தியநம்
மந்தமிலாதியை அன்பரறிந்தறிவித்தனரே.

2.18:
அறிவித்தனரன்பர் ஐயம்பறையுமுபாயமில்லாத்
துறவித்துனியிற் துணையாம்பரனைவரிக்கும்வகை
யுறவித்தனையின்றி யொத்தாரெனநின்றவும்பரைநாம்
பிறவித்துயர்செகுப்பீரென்று இரக்கும்பிழையறவே.

2.19:
அறவேபரமென்று அடைக்கலம்வைத்தனர், அன்றுநம்மைப்
பெறவேகருதிப் பெருந்தகவுற்றபிரானடிக் கீழ்
உறவேயிவனுயிர்காக்கின்ற ஓருயிருண்மையை, நீ
மறவேலென நம்மறைமுடிசூடியமன்னவரே.

2.20:
மன்னவர்விண்ணவர் வானோரிறையொன்றும் வான்கருத்தோர்
அன்னவர்வேள்வியனைத்துமுடித்தனர், அன்புடையார்க்கு
அன்னவரந்தரவென்ற நாமத்திகிரித்திருமான்
முன்னம்வருந்தி அடைக்கலங்கொண்டநம்முக்கியரே.

2.21:

முக்கியமந்திரங்காட்டிய மூன்றில்நிலையுடையார்
தக்கவையன்றித் தகாதவையொன்றுந்தமக்கிசையார்
இக்கருமங்கள் எமக்குளவென்னுமிலக்கணத்தான்
மிக்கவுணர்த்தியர் மேதினிமேவியவிண்ணவரே.

2.22:
விண்ணவர்வேண்டிவிலக்கின்றிமேவும் அடிமையெலா
மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர், வண்துவரைக்
கண்ணனடைக்கலங்கொள்ளக் கடன்கள் கழற்றியநம்
பண்ணமருந்தமிழ் வேதமறிந்தபகவர்களே

2.23:
வேதமறிந்த பகவர்வியக்க விளங்கியசீர்
நாதன் வகுத்தவகைபெறுநாம் அவன் நல்லடியார்க்கு
ஆதாரமிக்க அடிமையிசைந்து அழியாமறைநூல்
நீதிநிறுத்த நிலைகுலையாவகைநின்றனமே.

2.24:
நின்றன மன்புடைவானோர்நிலையில் நிலமளந்தா
னன்றிதுதீயதிதென்று நடத்தியநான்மறையா
லின்றுநமக்கிரவாதலின் இம்மதியின் நிலவே
யன்றி, அடிக்கடி ஆரிருள் தீர்க்க அடியுளதே.

2.25:
உளதானவல்வினைக்கு உள்ளம்வெருவி, உலகளந்த
வளர்தாமரியிணை வஞ்சரணாகவரித்தவர்தாங்
களைதானெனவெழுங் கன்மந்துறப்பர், துறந்திடிலு
மிளைதாநிலைசெக எங்கள்பிரானருள்தேனெழுமே.

2.26:
தேனார் கமலத்திருமகள்நாதன் திகழ்ந்துறையும்
வானாடுகந்தவர் வையத்திருப்பிடம், வன்றருமக்
கானாரிமயமுங்கங்கையும் காவிரியுங்கடலு
நானாநகரமு நகரமுங் கூடிய நன்னிலமே.

2.27:
நன்னிலமாமது நற்பகலாமது, நன்னிமித்த
மென்னலுமாமது யாதானுமாமங்கடியவர்க்கு
மின்னிலைமேனி விடும்பயணத்து, விலக்கிலதோர்
நன்னிலையாநடுநாடிவழிக்கு நடைபெறவே.

2.28:
நடைபெற அங்கிபகலொளிநாள் உத்தராயணமாண்டு
இடைவருகாற்றிரவை இரவின்பதிமின்வருணன்
குடையுடைவானவர்கோன் பிரசாபதியென்றிவரால்
இடையிடைபோகங்களெய்தி எழிற்பதமேறுவரே.

2.29:
ஏறியெழிற்பதம் எல்லாவுயிர்க்குமிதமுகக்கும்
நாறுதுழாய் முடிநாதனை நண்ணி, யடிமையினங்
கூறுகவர்ந்த குருக்கள்குழாங்கள்குரைகழற்கீழ்
மாறுதலின்றி மகிழ்ந்தெழும்போகத்துமன்னுவமே.

2.30:
மன்னும் மனைத்துறவாய் மருண் மாற்றருளாழியுமாய்த்
தனனினைவாலனைத்தும் தரித்தோங்குந்தனியிறையாய்
இன்னமுதத்தமுதால் இரங்குந்திருநாரணனே
மன்னியவன் சரண் மற்றொர்பற்றின்றிவரிப்பவர்க்கே.

2.31
வரிக்கின்றனன் பரன்யாவரையென்று மறையதனில்
விரிக்கின்றதுங் குறியொன்றால் வினையரையாதலின் நாம்
உரைக்கின்றநன்னெறி ஓரும்படிகளிலோர்ந்து, உலகந்
தரிக்கின்றதாரகனார் தகவாற் றரிக்கின்றனமே.

2.32:
தகவால்தரிக்கின்ற தன்னடியார்களைத் தன்திறத்தின்
மிகவாதரஞ்செயும் மெய்யருள்வித்தகன் மெய்யுரையின்
அகவாயறிந்தவர் ஆரணநீதிநெறிகுலைதல்
உகவாரென, எங்கள்தேசிகருண்மையுரைத்தனரே.

2.33:
உண்மையுரைக்குமறைகளில் ஓங்கியவுத்தமனார்
வண்மையளப்பரிதாதலின் வந்துகழல்பணிவார்
தண்மைகிடக்கத் தரமளவென்றவியப்பிலதாம்
உண்மையுரைத்தனர் ஓரந்தவிரவுயர்ந்தனரே.

2.34:
உயர்ந்தனன் காவலனல்லார்க்கு, உரிமைதுறந்துயிராய்
மயர்ந்தமைதீர்ந்து மற்றோர்வழியின்றியடைக்கலமாய்ப்
பயந்தவன் நாரணன் பாதங்கள்சேர்ந்து, பழவடியார்
நயந்தகுற்றேவலெல்லாம் நாடும் நன்மனுவோதினமே.

2.35:
ஓதுமிரண்டையிசைத்து அருளாலுதவுந்திருமால்
பாதமிரண்டும் சரணெனப்பற்றி, நம்பங்கயத்தா
ணாதனைநண்ணி நலந்திகழ்நாட்டிலடைமையெல்லாங்
கோதிலுணர்த்தியுடன் கொள்ளுமாறுகுறித்தனமே.

2.36:
குறிப்புடன்மேவந் தருமங்களின்றி, அக்கோவலனார்
வெறித்துளவக்கழல் மெய்யரணென்றுவிரைந்தடைந்து
பிரித்தவினைத்திரள் பின்தொடராவகை அப்பெரியோர்
மறிப்புடைமன்னருள்வாசகத்தால் மருளற்றனமே.

2.37:
மருளற்றதேசிகர் வானுகப்பாலிந்தவையமெலாம்
இருளற்று இறைவனிணையடிபூண்டுயவெண்ணுதலாற்
றெருளுற்றசெந்தொழிற்செல்வம்பெருகிச் சிறந்தவர்பால்
அருளுற்றசிந்தையினால் அழியாவிளக்கேற்றினரே.

2.38:
ஏற்றிமனத்தெழில்ஞானவிளக்கை இருளனைத்து
மாற்றினவர்க்கு ஒருகைம்மாறு மாயனுங்காணகில்லான்
போற்றியுகப்பதும் புந்தியிற்கொள்வதும் பொங்குபுகழ்
சாற்றிவளர்ப்பதுஞ் சற்றல்லவோமுன்னம் பெற்றதற்கே.

2.39:
முன்பெற்றஞானமும் மோகந்துறக்கலும் மூன்றுரையிற்
றன்பற்றதன்மையந் தாழ்ந்தவர்க்கீயுந்தனிதகவு
மன்பற்றிநின்றவகை உரைக்கின்றமறையவர்பாற்
சின்பற்றியென்பயன் சீரறிவோர்க்கிவைசெப்பினரே.

2.40:
செப்பச்செவிக்கமுதென்னத்திகழும் செழுங்குணத்துத்
தப்பற்றவருக்குத் தாமேயுகந்துதருந்தகவால்
ஓப்பற்றநான்மறையுள்ளக்கருத்தில் உறைத்துரைத்த
முப்பத்திரண்டிவை முத்தமிழ்சேர்ந்த மொழித்திருவே.

2.41:
புருடன்மணிவரமாகப் பொன்றாமூலப்
பிரகிருதிமறுவாக மான்றண்டாகத்
தெருள்மருள்வாளுறையாக ஆங்காரங்கள்
சார்ங்கஞ்சங்காக மனந்திகிரியாக
விருடிகங்களீரைந்துஞ்சரங்களாக
விருபூத மாலை வன மாலையாகக்
கருடனுறுவா மறையின் பொருளாங்கண்ணன்
கரிகிரிமேல் நின்று அனைத்துங்காக்கின்றானே.

2.42:
ஆராதவருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோனயோத்தி மன்னற்களித்த கோயி
றோலாததனிவீரன் தொழுத கோயி
றுணையான வீடணற்க்குத்துணையாங்கோயில்
சேராதபயனெல்லாஞ்சேர்க்குங்கோயில்
செழுமறையின் முதலெழுத்துச்சேர்ந்தகோயி
றீராதவினையனைத்துந்தீர்க்குங்கோயி
றிருவரங்க மெனத் திகழுங்கோயில் றானே

2.43:
கண்ணனடியிணையெமக்குக்காட்டும்வெற்பு
கடுவினையரிருவினையுங்கடியும்வெற்பு
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்பு
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு
ண்ணியத்தின் புகலிதெனப் பகழும் வெற்பு
பொன்னுலகிற் போக மெலாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரு மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கடவெற்பென விளங்கும் வேதவெற்பே.

2.44:
உத்தமவ மர்த்தல மமைத்த தொரெ
ழிற்ற _தவினுய்த்த தகணையால்
அத்திவரக் கன்முடி பத்துமொரு
கொத்தென வுதிர்த்த திறலோன்
மத்துறு மிகுத்த தயிர் மொய்த்தவெண்ணைய்
வைத்த துணுமத்தனிடமாம்
அத்திகிரி பத்தர்வினை தொத்தறவ
றுக்குமணி யத்தகிரியே.

2.45:
எட்டுமாமூர்த்தியெண் கணன் எண்டிக
கெட்டிறையெண்பிரகிருதி
எட்டுமாவரைகளீன்ற வெண்குணத்தோன்
எட்டெணுமெண்குணமதியோர்க்கு
எட்டுமாமலரெண் சித்தியெண்பத்தி
எட்டியோகாங்கமெண்செல்வம்
எட்டுமாகுணமெட்டெட்டெணுங்கலை
எட்டிரதமேலதுவுமெட்டினவே.

2.46:
ஓண்டொடியாள் திருமகளுந்தானுமாகி
ஒருநினைவாலீன்ற வுயிரெல்லாமுய்ய
வண்டுவரைநகர் வாழவசுதேவற்க்காய்
மன்னவற்குத் தேர்ப்பாகனாய்நின்ற
தண்டுளவமலர்மார்பன் தானேசொன்ன
தனித்தருமந்தானெமக்காய்த் தன்னையென்றுங்
கண்டுகளித்தடி சூடவிலக்காய்நின்ற
கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே.

2.47:
மூண்டாலுமரியதலின் முயலவேண்டா
முன்னமதிலாசை தனைவிடுகைதிண்மை
வேண்டாது சரணநெறி வேறோர்கூட்டு
வேண்டிலயனத்திரம் போல்வெள்கிநிற்கும்
நீண்டாகுநிறைமதியோர்நெறியிற்கூடா
நின்றனிமைதுணையாக வென்றன்பாதம்
பூண்டால் உன்பிழைகளெலாம் பொறுப்பனென்று
புண்ணியனார் புகழனைத்தும் புகழுவோமே.

2.48:
சாதனமுநற்பயனுநானேயாவன்
சாதகனுமென்வயமாயென்னைப்பற்றுஞ்
சாதனமுஞ்சரண நெறியன்றுனக்குச்
சாதனங்களிந்நிலைக்கோரிடையினில்லா
வேதனைசேர்வேறங்கமிதனில் வேண்டா
வெறெல்லாநிற்குநிலைநானேநிற்பன்
றூதனுமாநாதனுமாமென்னைப்பற்றிச்
சோகந்தீரென வுரைத்தான் சூழ்கின்றானே.

2.49:
தன்னினைவில் விலக்கின்றித் தன்னைநண்ணார்
நினைவனைத்துந்தான் விளைத்தும் விலக்குநாதன்
என்னினைவையிப்பவத்திலின்று மாற்றி
இணையடிக் கீழடைக்கலமென்றெம்மைவைத்து
முன்னினைவால் முயன்ற வினையால்வந்த
முனிவயர்ந்து முத்திதர முன்னேதோன்றி
நன்னினை வால் நாமிசையுங்காலம் இன்றோ
நாளையோ ஓ வென்றுநகைசெய்கின்றானே

2.50:
பாட்டுக்குரிய பழையவர் மூவரைப் பண்டொருகான்
மாட்டுக்கருள் தருமாயன் மலிந்துவருத்துதலா
னாட்டுகிருள்செக நான்மறையந்திநடைவிளங்க
வீட்டுக்கிடைகழிக்கே வெளிக்காட்டுமம் மெய்விளக்கே.

2.51:
உறுசகட முடையவொரு காலுற்றுணர்ந்தன
உடன் மருத மொடியவொரு போதிற்றவழ்ந்தன
உறிதடவுமளவிலுரலோடுற்றுநின்றன
உறுநெறியோர் தருமன் விடுதூதுக்குகுகந்தன
மறநெறியர் முறிய பிருதானத்து வந்தன
மலர்மகள் கைவருட மலற்போதிற் சிவந்தன
மறுபிறவி யறுமுனிவர் மாலுக்கிசைந்தன
மனுமுறையில் வருவதோர் விமானத்துறைந்தன
வறமுடைய விசயனமர் தேரிற்றிகழ்ந்தன
வடலுரக படமடிய வாடிக்கடிந்தன
வறுசமய மறிவரியதானத்தமர்ந்தன
வணிகுருகை நகர் முனிவர்நாவுக்கமைந்தன
வெறியுடையதுள வமலர் வீறுக்கணிந்தன
விழுகறியோர் குமரனென மேவிச் சிறந்தன
விறலசுரர் படையடைய வீயத்துரந்தன
விடலரிய பெரிய பெருமாள் மென்பதங்களே

2.52:
மறையுரைக்கும் பொருளெல்லா மெய்யன்றோர் வார்
மன்னியகூர் மதியுடையார் வண்குணத்திற்
குரையுறைக்க நினைவில்லார் குருக்க டம்பாற்
கோதற்ற மனம் பெற்றார் கொள்வார் நன்மை
சிறைவளர்க் குஞ்சிலமாந்தர் சங்கேதத்தாற்
சிதையாத திண் மதியோர் தெரிந்த தோரார்
பொறை நிலத்தின் மிகும்புனிதர் காட்டும் எங்கள்
பொன்றாத நன்னெறியிற் புகுதுவாரே.

2.53:
இது வழியின்ன முதென்றவர் இன்புலன்வேறிடுவார்
இதுவழியாமல் வென்றறிவார் எங்கள் டேசிகரே
இதுவழி எய்துக வென்று உகப்பாலெம் பிழை பொறுப்பார்
இது வழியா மறையோரருளால் யாமிசைந்தனமே .

2.54:
எட்டுமிரண்டுமறியாத வெம்மை இவையறிவித்து
எட்டவொண்ணா தவிடந்தரும் எங்களம்மாதவனார்
முட்டவினைத்திரண்மாள முயன்றிடுமஞ்சலென்றார்
கட்டெழில் வாசகத்தால் கலங்காநிலை பெற்றனமே.

2.55:
வானுளமர்ந்தவருக்கும் வருந்தவருநிலைக
டானுளனாயுகக்குந்தரம் இங்குநமக்குளதே
கூனுளநெஞ்சுகளாற் குற்றமெண்ணி யிகழ்ந்திடினுந்
தேனுள பாதமலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே.

2.56:
வெள்ளைப் பரிமுகர்தேசிகராய் விரகாலடியோ
முள்ளத்தெழுதியது ஓலையிலிட்டனம் யாமிதற்கென்
கொள்ளத்துனியினும் கோதென்றிகழினுங்கூர்மதியீர்
எள்ளத்தனையுகவாது இகழாதெம்மெழின் மதியே.

அடிவரவு : பொய்கை, இன்பத்தில், என்னுயிர், ஆரணனூல்
நீளவந்து, காளம்வலம், ஆளுமடை, திருவுடன்திருவுடன்,
புருடன், ஆராதவருள், கண்ணனடி, உத்தம
எட்டுமா, ஓண்டொடி, மூண்டாலும், சாதனமும், தன்னிலைவில்
தன்னிலைவில், பாட்டுக்கு, உறுசகடம், மறையுரை, இதுவழி
எட்டுமிரண்டு, வானுள், வெள்ளை,
சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.