LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல்- டி.ஜி.பி.க்கு நோட்டீஸ்!

குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத்தின் சபர்காந்த் மாவட்டத்தை சேர்ந்த 14 மாத குழந்தை கடந்த மாதம் 28ம் தேதி பீகார் வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் வடக்கு குஜராத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது.

இதையடுத்து அங்கு வசிக்கும்  உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து, தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  குற்றம் சாட்டிய நிலையில், மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா  கூறுகையில்,` வன்முறை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 533 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து காந்திநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த குஜராத் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் அபிலாஷ குமாரி கூறியதாவது:

குஜராத்தில் வசித்து வந்த இந்தி பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், இதையடுத்து அவர்கள் வெளியேறிய நிகழ்வு குறித்து மாநில தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு விளக்கம் கேட்டும்,  இது தொடர்பான அறிக்கையை  20 நாட்களில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 11 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.