|
||||||||
கீரை பருப்பு மசியல் (chopped spinach puree) |
||||||||
தேவையானவை: கீரை – 1 கட்டு பாசிபருப்பு – 1 /2 கப் கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 சிறியது தக்காளி – 1 சாம்பார்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 /2 டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – 1 /2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிது செய்முறை : 1.பாசிபருப்பை தனியே வேக வைத்துக் கொள்ளவும். 2.ஒரு அடி கனமான பாத்திரத்தில் கீரையைப் போட்டு அதனுடன் சீரகம், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, சாம்பார்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும். 3.கீரை வெந்தவுடன், வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை இதனுடன் சேர்க்கவும். 4.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு, பெருங்காயம், வெங்காயம் சேர்த்து தாளித்து கீரையில் ஊற்றவும். 5.திக்கான கரண்டியைப் பயன்படுத்தி கீரையை கடைந்து விடவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். |
||||||||
by shanthi on 07 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|