|
|||||
சிறுநீரக நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான சில வழிகள் ! |
|||||
நம்முடைய வாழ்க்கை முறை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், உணவுப் பழக்கம், பரம்பரை காரணமாக, சிறுநீரக நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. இந்திய இளைஞர்களில் அதிகமானோர் சிறுநீரக அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நம்முடைய வாழ்க்கை முறையின் காரணமாக 20 முதல் 40 வயதிற்குட்பட்ட இளைஞர்களை சிறுநீரக நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம். ஐ.ஜி.ஏ., நெப்ரோபதி என்ற நோய், உலகில் ஜப்பானுக்கு அடுத்த படியாக நம் நாட்டிலும் சீனாவிலும் தான் அதிகமாக பரவியுள்ளது.
இந்நோயின் ஆரம்ப அறிகுறியாக, ரத்தத்தில் அலர்ஜி உருவாகி சிறுநீரில் ரத்தக்கசிவு ஏற்படும். இந்த நோய் தாக்கிய பத்தாண்டுகளில், சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்படும். சிறுநீரைச் சோதனை செய்வதன் மூலம் இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மாத்திரைகள் மூலம் குணமாக்க முடியும். இந்த நோய்க்கான காரணம், முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இதற்கு நம் வாழ்க்கை முறைகள் தான் முக்கய காரணம் என்பது உண்மை.
உணவில் உப்பை குறைப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது, உடல் பருமனை குறைப்பது போன்றவை இந்த நோயை விரட்ட சிறந்த வழி. இளைய தலைமுறையினர் மைதா உணவினை தவிர்ப்பது அவசியம். மைதா உணவு என்றாலே புரோட்டா தான் நம் நினைவிற்கு வரும். புரோட்டா அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில், கணையத்தைத் தாக்கும் மூலப்பொருள் உள்ளது. |
|||||
by Swathi on 28 Sep 2012 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|