LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

அயர்தல் என்ற சொல்பற்றி அறிந்திருப்பீர்கள்

 நான் அயராமல் பாடுபட்டேன்.
நான் எளிதில் அயரமாட்டேன்.
எனக்கு அயர்ச்சி ஏற்பட்டுவிட்டது.

‘தளர்தல், வலுவிழந்து மயங்குதல்’ என்ற பொருளில் அயர்தல் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பேச்சு வழக்கில் ‘நான் அசராமப் பாடுபட்டன்யா... அவ்வளவு சீக்கிரம் அசர மாட்டேன்’ என்கிறோம்.

‘அசத்தப்போவது யாரு’ என்று கேட்கிறோம்.
‘அசத்திட்டான்பா’ என்கிறோம்.

இங்கே அசத்தல் என்பது ‘தளர்ச்சியடைதல்’ என்னும் பொருளில் பேச்சு மொழியில் வழங்கவில்லை. பிரமிக்க வைக்கிறது, வியக்க வைக்கிறது என்னும் பொருளில் வழங்கப்படுகிறது.

அசத்தல் என்பது அயர்தல் என்பதன் கொச்சை வழக்கா ? இல்லை.

உயர்தல், உயர்த்தல் என்று சொற்கள் உள்ளன.

‘நான் உசந்துட்டேன்... என்கூட இருந்த எல்லாரையும் உசத்திட்டேன்’ என்று பேச்சு வழக்கில் வழங்குவதுண்டு. உயர்வது என்பது தான் உயர்வது. உயர்த்துவது என்பது தான் பிறரை உயரச் செய்வது.

அதுபோல அசத்தல், அசத்திட்டான் என்பது அயர்த்தல், அயர்த்திவிட்டான் என்பதன் கொச்சை வழக்காகும்.

அயர்தல் என்றால் தற்சோர்வு. அயர்த்தல் என்றால் சோர்வுற்ற பிறரைக் கிளர்ச்சியடைய வைத்தல்.

நான் அயர்ந்தால் சோர்ந்து மயங்குவேன். நீங்கள் என்னை அயர்த்துவீர்களானால் வியந்து மகிழ்வேன்.

தமிழில் இந்த ‘அயர்தலும் அயர்த்தலும்’ தன்வினை பிறவினைபோல் தோன்றினும் கொச்சை வழக்கில் கொஞ்சம் எதிர்ப்பொருளாகி நிற்பது நம்மை அயர்த்துகிறது !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 18 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.