LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- சேயோன் யாழ்வேந்தன்

அய்யனாரின் முன்பகை - சேயோன் யாழ்வேந்தன்

நடுச்சாலையில்

 

நம்பர் பிளேட்

 

நசுங்கிக் கிடந்தது.

 

எண் சிறிதாகவும்

 

“அய்யனார் துணை”

 

பெரிதாகவும் தெரிந்தது.

 

ரத்தச் சகதியில்

 

வண்டி உருக்குலைந்து கிடந்தது.

 

கழுத்தில் அய்யனாரைக்

 

கட்டிக்கொண்டு வந்த

 

வண்டிக்கே இந்த நிலையென்றால்

 

அது இல்லாமல் வந்த

 

வண்டியோட்டிக்கு என்ன ஆனதோ?

 

மோதிய வாகனம்

 

பக்கத்தில் நின்றது

 

“வீரமாகாளி துணை” வாசகத்தோடு.

 

அய்யனாருக்கும் மாகாளிக்கும்

 

ஏதோ பழைய பகை போலும்!

 

- சேயோன் யாழ்வேந்தன்

by Swathi   on 25 Apr 2016  4 Comments
Tags: அய்யனார்   விபத்து   சாலை விபத்து              
 தொடர்புடையவை-Related Articles
அதிகரிக்கும் கார் விபத்துக்கள்... காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? அதிகரிக்கும் கார் விபத்துக்கள்... காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?
அய்யனாரின் முன்பகை - சேயோன் யாழ்வேந்தன் அய்யனாரின் முன்பகை - சேயோன் யாழ்வேந்தன்
விபத்து - சேயோன் யாழ்வேந்தன் விபத்து - சேயோன் யாழ்வேந்தன்
தயாரிப்பாளரின் நஷ்டத்தை நினைத்து கஷ்டத்திலும் நடிக்க வந்த நாசர் !! தயாரிப்பாளரின் நஷ்டத்தை நினைத்து கஷ்டத்திலும் நடிக்க வந்த நாசர் !!
விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவம் செய்ய போலீசின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை. விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவம் செய்ய போலீசின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை.
அந்தமான் அருகே படகு விபத்து !! 21 பேர் பலி !! 9 பேரை காணவில்லை !! அந்தமான் அருகே படகு விபத்து !! 21 பேர் பலி !! 9 பேரை காணவில்லை !!
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேருந்து சிறைபிடிப்பு - லோக் சத்தா கட்சி போராட்டம்
தீயணைப்பு துறையின் விழிப்புணர்வு குறும்படத்தில் பொது மக்களுக்கு அட்வைஸ் செய்ய வருகிறார் சூர்யா !! தீயணைப்பு துறையின் விழிப்புணர்வு குறும்படத்தில் பொது மக்களுக்கு அட்வைஸ் செய்ய வருகிறார் சூர்யா !!
கருத்துகள்
11-May-2016 06:42:18 சேயோன் யாழ்வேந்தன் said : Report Abuse
தோழர் vimo , தங்களின் பாராட்டுக்கு நன்றி!
 
04-May-2016 06:13:37 vimo said : Report Abuse
migavum arumai tholare
 
28-Apr-2016 01:22:01 சேயோன் யாழ்வேந்தன் said : Report Abuse
தங்களின் சீரிய கருத்துக்கு மிக்க நன்றி!
 
27-Apr-2016 22:33:43 கருணாநிதி .ச said : Report Abuse
சாலையில் கவனத்தோடு வாகனம் செலுத்தாதவர்களின் மூடத் தனத்தை மிகச் சிறப்பாக வடித்துள்ளீர்கள்..நண்பரே! மிகவும் அருமை..வாழ்த்துகள் !
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.