எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிப்பில், கடந்த மாதம் வெளியான படம் பாகுபலி.
இந்த படம் உலகமெங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான புகழையும், வசூலையும் ஒருசேரக் குவித்து வரும் நிலையில் விரைவில் இத்திரைப்படம் 500 கோடியைத் தொடவுள்ளது என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளதாம். இதுவரை சுமார் 40% படப்பிடிப்புகள், ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் மீதமுள்ள 60% படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப் படவுள்ளன. பாகுபலியின் முதல் பாகத்தில் ஒரு ட்விஸ்ட்டுடன் படத்தை முடித்திருந்தார் ராஜமௌலி, அதனால் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடம் அபரிமிதமான எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கிறது.
எனவே இரண்டாம் பாகத்தை இன்னும் பிரமாண்டமாக புதிய லொகேஷன்களில் எடுக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குநர், இதற்காக வட இந்தியாவின் சில இடங்களுக்கும் விசிட் செய்து இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் ராஜமௌலி. பாகுபலி படத்தின் முதல் பாகம் வட இந்தியாவிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது எனவே இரண்டாம் பாகத்தில் சில முக்கியமான பாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்பது ராஜமௌலியின் திட்டமாக இருக்கிறது.
நாளுக்குநாள் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன, இந்நிலையில் பாகுபலியின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு மாறலாம் என்று கூறுகிறார்கள்.
அதாவது, பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்கு மஹாபலி என்று தலைப்பு வைத்திருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|