வங்கியில் கணக்கு இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் புதிய வசதியை இந்தியாவிலேயே முதல் முறையாக பேங்க் ஆஃப் இந்தியா மும்பையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம், ஆன்லைன் பேங்க்கிங் அல்லது செல்ஃபோன் மூலம் ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து மற்றொருவரின் செல்ஃபோனுக்கு பணப் பரிமாற்றம் செய்யலாம். பணம் இடம் மாறியதற்கான அடையாள எண் செல்ஃபோனில் குறுந்தகவலாக வந்ததும், பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்மில் அந்த அடையாள எண்ணைப் பதிவு செய்து பணத்தை எடுக்கலாம்.
இந்த புதிய வசதியை பயன்படுத்த அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கவோ, ஏடிஎம் கார்டு வைத்திருக்கவோ அவசியமில்லை. பணம் எடுத்ததும் அதுபற்றிய எஸ்.எம்.எஸ். இருவரது செல்ஃபோனிலும் வரும் என பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
|