LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

அழகிய ரோஜா!

    புன்னகைபுரி என்ற ஊரை தயாளன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனிடம் விலை மதிக்க முடியாத ஒரு பெரிய வைரக்கல் இருந்தது. அது அவர்களது மூதாதையர் வைத்துச் சென்ற பரம்பரை சொத்து. அதைத் தன் நாட்டின் பெருமையாக அவன் கருதினான். இந்நிலையில் அந்த வைரக் கல்லில் தலை முடி போல் ஒரு கீறல் விழுந்தது.


     மன்னன் துடித்துப் போனான். வைரத்தின் அழகே போய் விட்டது என்று வருந்தினான். உடனே அரசன் தன் நாட்டின் நகை விற்பனையாளர்களை வரவழைத்து ஆலோசித்தான். “”அவ்வளவுதான் இந்த வைரத்தை ஒன்றும் செய்வதற்கில்லை.


     அது தன் மதிப்பைப் பெரும் பகுதி இழந்துவிட்டது. அது இன்னும் விரிசல் கொடுக்கும்,” என்று வைர வியாபாரிகள் கூறினர். “”யாராவது இந்த வைரத்தை இதன் பழைய மதிப்பிற்குக் கொண்டு வந்தால் அவருக்குத் தக்க பரிசு வழங்குவேன்,” என்று அரசன் அறிவித்தான். கடைசியாக ஓர் ஏழை பொற்கொல்லன் ஒருவன் அந்த ஊரில் இருந்தான். அவனது திறமையை பயன்படுத்தி கொள்ளத் தெரியாத பணக்கார நகை வியாபாரிகள் அவனை சீந்துவதே இல்லை. “”அரசே இந்தக் கீறலை வைத்தே வைரத்தின் மதிப்பைப் பல மடங்கு உயர்த்த முடியும்,” என்றான்.


     வைரக்கல் அவனிடம் ஒப்படைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் அந்த பொற்கொல்லன் ஒரு சிறிய நகைப் பேழையுடன் திரும்பி வந்தான். பேழையைத் திறந்ததும் அரசன் பிரமித்து விட்டான். வைரத்தின் மீது அழகான ரோஜா ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. முன்பு அரசனுக்குக் கவலை அளித்த கீறல், இப்போது ரோஜாவின் காம்பாகி இருந்தது. மகிழ்ச்சியடைந்த ராஜா அவனுக்கு பல பரிசுகள் கொடுத்ததுடன் ராணிக்கு புதுவிதமான நகைகள் பல செய்து தரும்படி ஆர்டர் கொடுத்தான். அவ்ளோ தான் சீந்துவார் இல்லாமல் இருந்த பொற்கொல்லர் ஒரே நாளில் மிகவும் பிரபலமானான். அவனிடம் ஆர்டர் கொடுக்க பல நகைக் கடைக்காரர்கள் “க்யூ’வில் நின்றனர். பேரும் புகழுமடைந்தான் வயதான பொற்கொல்லன்.

by parthi   on 09 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
12-Jan-2017 01:07:39 preethi said : Report Abuse
like
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.