LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

அழகு

அழகு ...

 

 

என் வீட்டு

மொட்டைமாடியில்

நின்றுபார்த்தால்

ஒரு குளம் தெரியும் ...

 

பச்சைப்

பசேலென்று

பசுமையாய் ...

 

பசுமைகளுக்கிடையே

இங்கொன்றும்

அன்கொன்றுமாய்

தாமரைமலர்களோடு ...

 

பார்ப்பதற்கு

மிக அழகானதாய் ....

 

பார்த்தவுடன்

யாரோடும்

ஒட்டிக்கொள்கிற

அழகாய்

ஒரு குளம் தெரியும் ...

 

மலர்சூடிய

அந்தக்குளம்

இப்போது

பச்சைப்பசுமையாய் ...

ரசித்துரசித்து

என்னோடுஒட்டிப்போன

அந்தக்குளம்

 

என்மனமொட்டி

என்குணமொட்டி ...

 

ஒருவகையாய்

சொல்லாத

சொந்தமாய் ...

 

நின்று

நிதானமாய் ...

 

என்னோடு

பயணப்பட்டு

பலகாலமகிப்போனது ....

 

சிலகாலம்

கழித்து....

 

ஒருநாள் ...

 

என்

ரசனைகண்டு

அந்தக்குளம்

என்வரவை

எதிர்பார்ப்பதாய்

என் உள்ளுணர்வுகள் ...

 

ஒரு ஆவலில்

பயணப்பட்டேன்

நலம் விசாரிக்க ....

 

பயனவேகத்தில்

செருப்பணிய

மறந்துபோனேன் ...

 

நடக்க

நடக்க ..

 

தூரம்

குறைந்தது ....

 

என்

கூர்மைத்திறன்

அதிகமானது .....

 

நெருங்கி

விட்டேன் ...

 

குளம்

சுற்றிலும் முட்கள் ...

 

நான்ரசித்த

குளம் சுற்றிலும்

முட்கள் ....

 

பசுமையாய்

என்சிந்தையில்

அமர்ந்திருந்ததெல்லாம்

வெறும்பாசிகள் ......

 

என்மனம் கவர்ந்த

குளம்சூடிய

மலர்பறிக்க

குளமிறங்கினேன் ...

 

எல்லாம்

சகதிகள் ...

 

முட்கள்பொதித்த

சகதிகள் ....

 

பின்

வெகு கவனமாய்

காலில்குத்திய

முட்களோடு

கரையேறினேன் ....

 

முட்களின்

வேதனையோடு

குளக்கரையில்

சிறிதுநேரம்

நின்றுபார்த்தேன் ....

 

அழகு ...

 

ரசனை ....

 

காலில்

குத்தியமுள் ...

 

அலசிப்பார்தேன் ...

 

ரசனை

தவறில்லை ....

 

குளம் ...

அதன்குணம்

அப்படி ...

 

பழகிப்பார்க்காது

பரீட்சயமில்லாது

குளத்தைஉயர்வென்று

உருவகம்செய்தது

என்தவறு ...

 

பாடம்கற்றேன் ....

 

பின்

பயணப்பட்டேன் ...

 

இப்போதும்

அந்தக்குளம்

பச்சைப்பசேலென்று

பசுமையாய் ...

 

அழகு ...

அதுஅழகு ...

 

தூரத்திற்கு

மட்டுமேஅதுஅழகு ...

 

ரசனை ..

 

அதுஎன்னை

உயிர்ப்பிக்கிற

என்உரிமை ....

 

அதுதுறக்க

ஆசையில்லை ...

 

ஆனால்

அருகேபோகும்

ஆசைவருவதில்லை

எனக்கு ...

 

காலில்

குத்தியமுள் ....

 

அதுஎன்னை

உயர்த்துகிற

அனுபவம்......

 

-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.