தேவையானவை :
பீட்ரூட் - 1 சிறியது வெங்காயம் - சிறியது 1 மிளகாய் வற்றல் - 5 கடலைப் பருப்பு - அரை டேபிள் ஸ்பூன் உளுந்துப் பருப்பு - அரை டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன் புளி - சிறிது எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
1.பீட்ரூட்டை தோல் சீவி, துருவிக்கொள்ளவும்.
2.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3.கடாயில் எண்ணெய் காயவைத்து கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பை பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.
4.பின்னர் வெங்காயம்,மிளகாய்வற்றல் சேர்த்து வதக்கவும்.
5.வெங்காயம் வதங்கியதும் பீட்ரூட் துருவல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும் .
6.இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி ஆறவைக்க வேண்டும் .
7.ஆறியதும் தேவையான உப்பு,புளி சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.இப்பொழுது கலர்புல்லான பீட்ருட் சட்னி தயார் .
|