LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

பெஞ்சமின் பிராங்கிளின்

இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் ; ஒன்று சிறந்த படைப்புகளை

எழுதுங்கள் , அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும்

அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழுங்கள் .


ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கிய மூத்த தலைவர்களில் ஒருவர் பெஞ்சமின் பிராங்கிளின் ( Benjamin Franklin ) ஆவார் . அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தைத் தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர் . அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றிய குழுவில் முக்கியமானவர் . இவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது . பெஞ்சமின் பிராங்க்ளின் 1706 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார் . ஓராண்டு மட்டுமே பள்ளிப்படிப்பை படித்தார் . ஆனால் நூல்களை வாசிப்பதில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார் . அச்சுக்கூடத்தில் வேலை செய்தபோது அச்சுக்கு வரும் புத்தகங்கள் அனைத்தையும் படித்தார் . பிறகு ஒரு அச்சு நிறுவனத்தை தொடங்கியதோடு , நிறைய இதழ்களில் எழுதியதால் அவர் அமெரிக்கா முழுவதும் பிரபலம் அடைந்தார் .

பெஞ்சமின் ஆய்வுகளிலும் ஈடுபட்டார் . மின்சாரத்தின்மீது ஆய்வுகள் செய்தார் . மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்கும் இடிதாங்கிகளைக் கண்டுபிடித்தார் . முதியவர்களின் எட்டப்பார்வை , கிட்டப்பார்வைக்கும் சேர்த்து ஒரே கண்ணாடியான வெள்ளெழுத்துக் கண்ணாடியை இவரே முதலில் கண்டுபிடித்தார் . இவர் ஒரு விஞ்ஞானி , எழுத்தாளர் மற்றும் ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் விளங்கினார் . சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா வெளியிட்ட இரண்டு அஞ்சல் தலைகள் ஒன்றில் இவரின் படம் இடம் பெற்றிருந்தது . இவர் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று இயற்கை எய்தினார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.